டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு
சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர் நல்லகண்ணு அவர்கள் தலைமையில், பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12 அன்று திறந்து வைத்தார்.
இவ்விழாவிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்தது பெரும் ஊக்கமாக அமைந்தது.
விழா துவங்குவதற்கு முன்பு நல்லகண்ணு அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், தான் தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்ற தகவலை அவரிடம் தெரிவித்தார். Z
வாசிப்பு சார்ந்த முன்னெடுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வைரமுத்து கூறினார்.
இந்த வளாகத்தின் முதல் தளத்தில் 1500 சதுர அடியில், 80 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட ஓவியக் கூடத்தை எழுத்தாளர் சி மோகன் தலைமையில் மூத்த ஓவியர் சிற்பி முருகேசன் அவர்களும், ஓவியர் விஸ்வம் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.
தொடர்ந்து தமிழ் சூழலில் வாசிப்பு சார்ந்து முன்னெடுப்புகளை டிஸ்கவரி புக் பேலஸ் எடுக்கும் என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். வாசகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.









