மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் அனிமேஷன் படம். விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரன்யகசுபுவை அழித்ததும் தான் ’மகா அவதார் நரசிம்மா’.
தெரிந்த கதை என்றாலும், அதை தற்போஒதைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்ள வேண்டிய நோக்கத்துடனும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து மகிழும்படியான அனிமேஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்
சிறுவர்களுக்கு புரியும்படியும், ரசிக்கும்படியும் கதையை நகர்த்தியிருப்பதோடு, பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மூலம் வியக்க வைத்திருக்கிறார்கள்.

அனிமேஷனையும் மிகச் சரியாக கையாண்டிருக்கின்றனர் படக்குழுவினர். குறிப்பாக கிளைமாக்ஸில் நரசிம்ம அவதாரமும், அவர் அசுரனை அழிப்பதும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
வசன உச்சரிப்பு, இசை, காட்சியமைப்பு என அனைத்தையும் சரியாக கையாண்டு சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.









