மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஒரு மறக்க முடியாத சக்தி..!
ஸ்ரீதேவி இயற்கையின் சக்தி. தனது கலையை அவர் திரையில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தார். அதேசமயம், அவர் தனிமை விரும்பியாகவும் இருந்தார். தீரஜ்குமாரை ஸ்ரீதேவி தனது குடும்பத்தில் ஒருவராகவும் கருதினார். அவர் ஒரு ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர். ஸ்ரீதேவியின் அசாதாரண வாழ்க்கையை அவர் புத்தகமாக எழுதுகிறார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.—போனி கபூர்.
இந்தியத் திரையுலகில் ஈடு இணையற்ற வாழ்க்கையைப் பெற்ற மிகச்சிறந்த சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை இந்தப் புத்தகம் தெரிவிக்க இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் கடந்த 50 வருடங்களில் 300க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவர் பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், மாநில அரசு விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார்.









