தீராக்காதல் – விமர்சனம்
நெடுஞ்சாலை ஷிவதாவா இவர், நடிப்பில் என்ன ஒரு முன்னேற்றம்
காதலிக்கும் அனைவருக்குமே அந்தக் காதல் திருமணத்தில் போய் முடிவதில்லை. அப்படி சேராத காதல்கள் இருவேறு திசைகளில் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அதுவே ‘தீராக் காதல்’.

பின்னர் இருவரும் சென்னை திரும்பும் நேரத்தில், இனி சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால், ஒரு சண்டையில் கணவர் கொடூரமாக தாக்கியதால் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் ஆரண்யா. அதன் பிறகு அடிக்கடி கௌதமை சந்திக்கும் அவர், தன்னால் பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை என்றும், குடும்பத்தை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடுமாறும் கௌதமை நச்சரிக்கிறார். கௌதமால் கொஞ்சம் கொஞ்சமாக நிராகரிக்கப்படும் ஆரண்யா, ஒருகட்டத்தில் கவுதமின் வீடு இருக்கும் அபார்ட்மென்ட்டுக்கே குடிவந்து விடுகிறார். இதனால் இருவரது கௌதமுக்கு பல சிக்கல்கள் எழுகின்றன. அதிலிருந்து அவர் மீண்டாரா? ஆரண்யாவின் காதல் என்னவானது? அது கௌதமின் குடும்பத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? – இப்படி பல கேள்விகளுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லியிருக்கிறது ‘தீராக் காதல்’.
“அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹின் வெங்கடேசனின் அடுத்த படைப்பு இது. மனைவிக்கும் காதலிக்கும் இடையே அல்லாடும் கணவன் என்ற கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. எனினும், அது பார்வையாளர்களை ஈர்க்கும்படி புதிதாக வடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம்.

முதல் பாதி முழுவதும் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் – ஜெய் காதல் காட்சிகள் பார்க்கும் நமக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலவீனமான காட்சியமைப்புகளால் ஒரு கட்டத்தில் இருவரும் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தையே பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவற்றில் எந்தவொரு அழுத்தமும் இல்லாததால், ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் மீண்டும் ஜெய்யை தேடி ஓடும் காட்சிகள் உணர்வுரீதியாக எந்தவொரு பாதிப்பையும் தரவில்லை.
அமைதியான நடுத்தர வயது குடும்பத் தலைவனாக ஜெய் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். பழைய காதலியா, கட்டிய மனைவியா என்று ஒருவித குழப்ப மனநிலையை படம் முழுவதும் சிறப்பாக பிரதிபலிக்கிறார். படத்தில் மற்றொரு கனமான கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷுடயது. தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார். எனினும் எமோஷனல் காட்சிகளில் தடுமாற்றம் தெரிகிறது. ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதாவுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் அதனை நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஜெய்யின் நண்பனாக வரும் அப்துல், ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக வரும் அம்ஜத் கான், ஜெய் – ஷிவதா தம்பதியில் குழந்தையாக நடித்திருக்கும் வ்ரித்தி விஷால் என அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

அதேபோல திரும்ப திரும்ப ஜெய்யை, ஐஸ்வர்யா ராஜேஷ் லவ் டார்ச்சர் செய்யும் அளவுக்கான காரணம் அழுத்தமாக பதிய வைக்கப்படாதது பெரிய குறை. ஜெய் வீட்டுக்கு எதிரிலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் குடிவருவது, தன் சைக்கோ கணவனை ஓங்கி அறையும் காட்சி, ஷிவதாவிடம் ஜெய் மாட்டிக் கொள்வது ஆகிய காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது. ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் கூர்மையான வசனங்கள் பல இடங்களில் அப்ளாஸ் பெறுகின்றன.
சித்து குமாரின் பின்னணி இசை, ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜிகேவின் எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் அம்சங்கள் படத்தின் குறைகளை நிவர்த்தி செய்துவிடுகின்றன. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் இந்த ‘தீராக் காதல்’. இயக்குனரின் திறமையான திரைக்கதையால் வலிமையான வசனத்தால் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜெய், ஷிவதா இவர்களின் போட்டி நடிப்பாள் படம் நிமிர்ந்து நிற்கின்றது