
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் சுந்தர் சி. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவரான சுந்தர் சி, தற்போது ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதை தொடர்ந்து சுந்தர் சி, சூப்பர்ஹிட் கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளாராம்.அது என்ன படம்..?

இந்நிலையில், கன்னட மொழியில் சூப்பர் ஹிட்டான ‘மாயாபஜார்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி என்பவர் இயக்க உள்ளதாகவும், இதில் பிரசன்னா, ஷியாம், யோகி பாபு, அஸ்வின் உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தை தன்னுடைய அவ்னி சினி மூவிஸ் நிறுவனம் மூலம் சுந்தர் சி தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








