

80,90 களில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து வந்தவர் நடிகை சரிதா. இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நிறைய நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் அசத்திவந்தார்.
இவர் இதுவரை 250 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தமிழ் நடிகைகள் நக்மா, ரம்யாகிருஷ்ணன் போன்றோருக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர் நடிப்பு திறமையை பாராட்டும் விதமாக இவருக்கு இரண்டு முறை பிலிம் பேர் விருதுகள், நந்தி விருது மற்றும் தமிழக அரசின் விருது மற்றும் கர்நாடக அரசின் விருது என வாங்கி உள்ளார்.
இரண்டுமுறை திருமணம் செய்தும் கருது வேறுபாட்டினால் விவாகரத்து செய்துவிட்டார் சரிதா. தற்போது தன்னுடைய மகனுடன் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் சநடிகையான ஸ்ரீப்ரியாவுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.










