* கஜா புயலால் கலங்கி நின்ற மாணவியின் நீட் தேர்விற்கு உதவி மற்றும் உறுதுணையாக நின்று அம் மாணவியை மருத்துவராக்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்!*
*கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி பூக்கொல்லை மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். ‘
அந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியதையடுத்து அவரது குடிசை வீட்டிற்கு, தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்!

‘இந்நிலையில் இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் ..
கடைசி வரைக்கும் போராடு! உனக்கு நான் இருக்கிறேன்!! என ஊக்கம் அளித்து சகானாவை நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து அம்மாணவியின் மருத்துவ கனவிற்கு உயிரோட்டம் அளித்துள்ளார்! ‘
ஆம்! நடந்து முடிந்த நீட் தேர்வில் 273 மதிப்பெண் பெற்று 120 இடத்தை பிடித்த சகானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்துள்ளது!!*
இன்னும் இந்த பூமியில் மனிதாபிமான் சாகவில்லை என்பதற்க்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் ஓர் உதாரணமாக திகழ்கிறார்.

எங்கள் தமிழ் 2 டே நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள் சிவா சார் அன்புடன்-சரண்
தலைமை நிருபர்.
(99946-67873)









