நாயகன் கார்த்தீஸ்வரன் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், இவரது தாய் திருமணம் செய்து வைக்கிறார். விருப்பம் இல்லாமல் நாயகி காயத்ரி ரமாவை திருமணம் செய்து கொள்கிறார் கார்த்தீஸ்வரன்.
திருமணத்திற்கு பின்பு, பேய் இருக்கும் வீடு என்று தெரிந்து கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள். அங்கு இருக்கும் பேய்கள் கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவருக்கும் பல தொந்தரவு செய்கிறது.
இறுதியில் அந்த வீட்டில் பேயாக இருப்பது யார்? எதற்காக பேயாக மாறினார்கள்? கார்த்தீஸ்வரன்- காயத்ரி ரமா இருவரும் பேயை எப்படி சமாளித்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரனே இப்படத்தை இயக்கி இருக்கிறார். பேய் படங்கள் என்றாலே, பழிவாங்குதல், பெரிய பிளாஷ்பேக் என்று வழக்கமான படங்கள் போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன். படத்தின் நீளத்தையும், தேவையற்ற காட்சிகளையும் குறைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.அபிமன்யுவின் ஒளிப்பதிவு சுமார் ரகம். ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘பேய் இருக்க பயமேன்’ திகில் குறைவு.









