• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் விது நடிக்கும் ’29 ‘படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

by Tamil2daynews
May 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விது நடிக்கும் ’29 ‘படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

 

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29- Welcome To The World of 29′ அறிமுக நிகழ்வு

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிப்பில் உருவாகியுள்ள ’29’ திரைப்படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29’ எனும் பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘மேயாதமான்’ , ‘ஆடை’,’ குலுகுலு ‘ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ 29’ திரைப்படத்தில் விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம்- கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

எதிர்வரும் மே மாதம் எட்டாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் நான்கு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் … படத்தினை ரசிகர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்தும் வகையில் ‘வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ‘ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பி. எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி ,பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ் , ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் மகேந்திரன் பேசுகையில், ” எனக்கு இது ஒரு முக்கியமான மேடை. எனக்கு 29 வயது நடக்கும் போது தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாஸ்டர்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார். அன்றுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ரத்னகுமார் என்னை அழைத்து ’29’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ரத்னகுமார் அண்ணாவிற்கு நன்றி.

நான் சோர்வாக இருக்கும் தருணத்தில் யாராவது என்னை கை தூக்கி விட வேண்டும் என நினைப்பேன். பொதுவாக எல்லோருக்கும் எல்லாரும் இருப்பார்கள். ஆனால் நான் 35 ஆண்டு காலமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். சிலர் வருவார்கள். செல்வார்கள். கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள். சிலர் அழைத்துச் சென்று விட்டு விடுவார்கள். அது மிகவும் கடினமானதாக இருக்கும்.‌

நான் ஷான் ரோல்டனின் இசையில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டிருக்கிறேன். அது இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. அதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் நன்றி.

நான் நடிக்கும்போது பல தருணங்களில் எனக்கு தயக்கமாகவும் இருக்கும்… பயமாகவும் இருக்கும். நாம் ஒரு வகையில் நம்பிக்கையுடன் நடிப்போம். அதை எதிரில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாமல் இருக்கும். ஆனால் நான் என்னுடன் நடித்த சக நடிகரான விதுவை படத்தின் முதல் நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய நடிப்பை பார்க்கும் போதும்… அவருடன் இணைந்து நடிக்கும் போதும்.. எனக்கு எந்த தயக்கமும், பயமும் இருந்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர்.

நான் சிறிய வயதில் இருந்து நிறைய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அவர்களிடம் நான் என்னென்ன தகுதிகளை பார்த்தேனோ…! அவை எல்லாம் விதுவிடமும் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்திற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்கிறார். இதற்காக அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பிலும் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன். அவர்களிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருக்கிறேன்”என்றார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், ” இங்கு திரையிடப்பட்ட குட்டி கிளிம்ப்ஸை பார்த்திருப்பீர்கள். இதில் சத்யாவையும் , விஜியையும் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் விஜி. இது ஒரு லவ் ஸ்டோரி. 29 வயதில் உள்ள சத்யா. 21 வயதான பெண் விஜி. இந்த வயது இடைவெளியை தெளிவாக சொல்லி இருக்கிறோம். ஏனெனில் 21 வயதான விஜி கேரக்டருக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் இருக்கிறது.‌ அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதில் கவனமாக உள்ள பெண். அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உள்ளது. ஆனால் சத்யாவிற்கு எந்த ஒரு நோக்கமும் இல்லை. அவருக்கு விஜி மட்டும்தான் அவருடைய வாழ்க்கையின் ஒரே நோக்கம்.

நம்முடைய வாழ்க்கையில் யாரேனும் ஒருவர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அதே போல் சத்யாவின் வாழ்க்கையில் விஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கிறேன்.

கண்டிப்பாக இந்த லவ் ஸ்டோரியை பார்க்கும் போது ரசிகர்கள் எளிதாக தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இந்தப் படம் சத்யா மற்றும் விஜியின் அழகான வாழ்க்கை பயணம். இந்த குட்டி கிளிம்ப்ஸ் .. வெல்கம் டு தி வேர்ல்ட் ஆஃப் 29 ஐ குறிக்கிறது. இன்னும் இது போல் நிறைய உள்ளது. விரைவில் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாக உள்ளது.

எனக்கு எப்போதும் இதை போல் அசலான உண்மையான இயற்கையான அடுத்த வீட்டு பெண் போன்று தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புவேன். கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும்… அதை திரையில் வெளிப்படுத்துவது கடினம். இது போன்றதொரு சவாலான கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி.

இந்தக் கதை 2010 ஆம் ஆண்டின் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த காதல் அப்பாவித்தனமாகவும்… இயல்பாகவும் ..நேர்மையானதாகவும்… இருக்கும். அதை நாங்கள் உணர்ந்தோம். அதனை படத்தை பார்க்கும் போது ரசிகர்களாகிய நீங்களும் உணர்வீர்கள்.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளாகட்டும் வசனங்களாகட்டும் எல்லாமே நன்றாக இருக்கும். ரசிகர்களை உணர்வுபூர்வமாக ஈர்க்கும். இது போன்றதொரு அழகான விஜி எனும் கேரக்டருக்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநர் ரத்ன குமாருக்கு நன்றி. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து உற்சாகம் அளித்த இயக்குநருக்கு நன்றி ” என்றார்.

நடிகர் விது பேசுகையில், ” இந்த மேடை எனக்கு மிகவும் ஸ்பெஷலான மற்றும் தனித்துவமான மேடை. 13 வருடங்களுக்கு முன் கார்த்திகேயனை சந்தித்து அவரிடம் விவாதித்த ஒரு விசயம் இது. எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன் சினிமாவிற்கு வந்தேன். அப்போது பேசிய விசயங்கள் இப்போது நடந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். அதனால் படப்பிடிப்பு நிறைவடைந்த போது உண்மையில் உணர்வுபூர்வமாக கண்ணீர் சிந்தினோம்.

இந்த கதையில் சத்யாவாக நான் நடிக்க முடியும் என்று என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநர் ரத்னா அண்ணாவிற்கு நன்றி. ரத்னாவிடம் ஒரு பேரன்பு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவரின் பேரன்பு உங்கள் அனைவரையும் வசப்படுத்தும். அவர் சொன்ன – சொல்லும் விசயம் அனைவரையும் சென்றடையும். இந்தப் படம் மிகவும் உயிர்ப்புள்ள படைப்பு. உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் இசை அற்புதமான மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறது. அவருடைய பாடல்களும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு ஜீவன். நான் ஒரு படத்தில் முதல் முதலாக ஹீரோவாக நடிக்கும் போது இப்படி ஒரு இசை அமைந்ததை ஆண்டவனின் ஆசியாகவே பார்க்கிறேன்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான மாதேஷ் மாணிக்கத்திடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ப்ரீத்தி அஸ்ராணி இல்லாமல் இந்த படத்தின் பணிகள் நடைபெற்றிருக்காது. அவர் அந்த விஜி கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் பொருந்தி இருந்தார். அவரைத் தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரத்திற்கு கற்பனை செய்து பார்க்க முடியாது. ’29’ திரைப்படம் மே 8‌ ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்த படத்தின் நோக்கம் என்ன? இந்த படத்தை உருவாக்கி இருப்பதன் பின்னணி என்ன? என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

நான் நிறைய லவ் படங்களில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் . இதனை மாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தபோது… இயக்குநர் ரத்னகுமார் என்னை சந்தித்தார். ஏதாவது வித்தியாசமானதாக தனித்துவமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அவர் கதை சொன்னார் நான் இதுவரை கேட்ட கதைகளிலேயே என்னை அதிகம் பாதித்த கதை இது . நான் நிறைய லவ் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இருந்தாலும் இந்தப் படத்தின் கதை எனக்குள் வறண்டு போயிருந்த காதல் உணர்வை மீட்டது. அதனால் அவருக்கு முதலில் ஒரு நன்றி.

29 திரைப்படம் முழுவதும் ரத்ன குமாரின் உலகம். இந்தப் படத்தில் ஒரு பங்காக இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

படப்பிடிப்பின் முதல் நாள் நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் விது வேறு மாதிரியாக இருந்தார். நடிகர் குரு சோமசுந்தரம் நிறைய படங்களில் அவர் நடித்திருப்பார். ஆனால் அவர்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உடனடியாக தெரியாது. அந்த அளவிற்கு அவர் கதாபாத்திரத்துடன் பொருந்தி இருப்பார். அதேபோல் விதுவும் அன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். அழகான தோற்றம். இந்த படத்தின் கதை அவர் மீதுதான் பயணிக்கிறது.

ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்திற்கு ஒரு பில்லர் போல் இருக்கிறார். பொதுவாக என்னுடைய ஒவ்வொரு படத்திலும் பெண்களுக்கான குரல் ( வுமன் வாய்ஸ்) தானாக அமையும். இதில் அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார் இது எனக்கு பின்னணி இசை அமைக்க உதவியாக இருந்தது.

இப்போதைய ட்ரெண்டிங்கில் காதல் படங்கள் என்றால் ‘டேட்டிங்.. என அவுட் லேயர்லேயே படங்கள் இருக்கிறது. ஆனால் காதலைப் பற்றி சற்று ஆழமாக சிந்திக்கும் கதைகள் இல்லை. அந்த அளவிற்கு காதலில் ஆழமாக செல்வதற்கு பலரால் முடியவில்லை. நவீன வாழ்க்கை அதற்கு இடம் தருவதில்லை. கவிதை போன்ற காதல் இன்றைய ஃபாஸ்ட்டான லைஃப்பில் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியாது.

காதல் என்பது ஆன்மா சம்பந்தப்பட்ட உணர்வு என்பதை தான் இந்த படம் எனக்கு கற்றுக் கொடுத்தது.

நான் மிகவும் பிராக்டிக்கலான மனிதர். பொதுவாக திரைப்படத்தில் கிளைமாக்ஸ் பிறகு காதல் இருக்குமா ? என்று கேள்வி‌ எழுப்புபவன். ஏனெனில் காதல் என்றால் பாடல் ..கவிதை.. என்று எனக்குள் ஒரு எண்ணம் இருக்கிறது.

திரும்பத் திரும்ப ஏன் காதல் பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறது என எண்ணும் போது.. காதல் என்பது ஆத்மாவை தேடுவது போன்றது என்பதை உணர்ந்தேன். அதேபோல் 29 திரைப்படம் காதல் என்பது ஒரு உரையாடல். அதிலும் நேர்மையான உரையாடல் என்பதைப் பற்றி பேசுவதால்.. இந்தப் படத்தைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன்.

இந்தப் படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்… தமிழ்நாட்டினுடைய காதல் படங்கள் மற்ற ஊர் காதல் படங்கள் போல் கிடையாது. நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை. காதலை எதார்த்தமாக கையாள்வது.‌ கவிதையாக கையாள்வது. நிலவைப் பற்றி பேசினாலும் நம்ம ஊரில் நம்ம மொழியில் பேசினாலும் சொன்னாலும் அது புதிது தான். நிலவு ஒன்றுதான். ஆனால் அதைப்பற்றி பேசுவது புதிதாக இருக்கும். தமிழ்நாட்டினுடைய காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் 29 நிச்சயமாக இடம் பெறும். இதை ரசிகர்களே மே 8 ஆம் தேதி அன்று திரையில் பார்த்து தெரிந்து கொள்வார்கள். இந்த படத்தின் வெற்றி விழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ” இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது.

என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்… லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர் . கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன்? என்று யோசித்தால்.. இதற்கு கார்த்திக் சுப்புராஜூம் லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார்? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.

இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.

நான் -கார்த்திக் சுப்புராஜ்- லோகேஷ் கனகராஜ் -ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து.. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது.. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.

நேற்று கூட மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால்… நாம் எல்லாம் யார்..? என நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.

லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

லோகேஷ் கனகராஜ்- கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால்… அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌

விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள்.

இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.

செவன் ஜி ரெயின்போ காலனி… விண்ணைத்தாண்டி வருவாயா… அலைப்பாயுதே… போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ்.

இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி.

முப்பதாம் தேதி ஏப்ரல் 30 ஆம் தேதி தனுஷ் படம் வெளியாகிறது. மே 14-ஆம் தேதி சூர்யா சாரின் படம் வெளியாகிறது. இரண்டு படத்திற்கும் நடுவில் அழகான சூப்பரான காதல் கதையாக 29 எனும் படமும் வெளியாகிறது அனைத்து படங்களையும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்க வேண்டும்.‌

நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

தயாரிப்பாளர் -இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய ‘மது’ எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் ‘மது’ எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.

என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும்.

மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.

என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும்.

இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.

நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது.

அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார்.

அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29.

லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான ‘பொல்லாத ஆசைகள்..’ என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ?…படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா?.. என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌

அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால்… அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌

இந்தப் படம் என்ன மாதிரியான படம்… இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் … படம் எதைப் பற்றி பேசுகிறது… காதல் என்றால் என்ன… ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னா குமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌

எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ.. அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.

நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌

இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், ” மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் ‘வாட்ஸ் இன் மைண்ட்’ என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் ‘அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்’ என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.

சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.

இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.

அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்… வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு ‘ என்றார்.

இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது.

நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.

கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.

அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது.

எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா… பஸ் நம்பரா… ஏதேனும் ஒரு நாளா… அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌

நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது …உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்…. தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.

29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் ‘ஃபைட் கிளப்’ எனும் ஒரு படமும், ‘மைக்கேல்’ எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.

இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌

2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.

அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.

இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

மே எட்டாம் தேதி 29 வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் ‘கர’ திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்

படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.‌” என்றார்

Previous Post

கர – விமர்சனம் ரேட்டிங் – 4/5

Next Post

CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!

Next Post

CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • Actor Mohan Raman daughter  Actress Vidyullekha gets engaged to Mr.Sanjay Watwani

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.