அப்பா ஜெயராம், அம்மா ஊர்வசி, மகள்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார், நடுத்தர குடும்பத்தின் அனைத்து சண்டைகளும், சச்சரவுகளும் நிறைந்த இந்த குடும்பம் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மூத்த மகள் ஒருவரை காதலிக்க, இளையமகளை ஏரியா ரவுடி சாண்டி காதலிக்கிறார். அவரது காதலை ஏற்க மறுப்பதால், அவர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுக்க, அவரது தாதா அம்மாவும் மகனின் காதலுக்காக ஜெயராம் குடும்பத்தினரை மிரட்ட செய்கிறார். இந்த காதல் தொல்லையால் குடும்பம் தங்களது நிம்மதியை இழந்து தவிக்க, ஒரு கட்டத்தில் சாண்டியை கொலை செய்து விடலாமா ? என்று திட்டம் போடுகிறார்கள்.
இப்படி பலர் மீது சந்தேகம் ஏற்படும் சூழலில், எதிர்பார்க்காத திருப்பத்துடன் சாண்டி கொலைக்கான பின்னணியை இயக்குநர் பாண்டிராஜ், சுவாரஸ்யமாகவும், காமெடியாகவும் சொல்வது தான் ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் மீதிக்கதை.
ஜெயராம் – ஊர்வசி ஜோடியின் இயல்பான நடிப்பும், டைமிங் காமெடி வசனங்களும் சிரிப்பால் திரையரங்கை அதிர வைக்கிறது. இருவருக்கான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக வேலை செய்திருப்பது படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது.
சாண்டி புதிய பரிணாமத்தில் நடிப்பில் மிளிர்கிறார். நடன இயக்குநர் என்ற பிம்பத்தை தாண்டிய நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அக்கா, தங்கையாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் ஆகியோரது குறும்புத்தனமான நடிப்பு நடுத்தர குடும்ப இளம் பெண்களை பிரதிபலித்திருக்கிறது. ஜி.கே.எம்.தமிழ்குமரன், யோகி பாபு, பூர்ணிமா ரவி என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒரு பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், அதை சோகமாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, சிறு சிறு கதாபாத்திரங்களில் கூட பரிட்சயமான நடிகர்கள், படம் முழுவதும் குறையாத காமெடி காட்சிகள் என்று பயணிக்கும் கதை, ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கின்றன.
சமூகத்திற்கான ஒரு முக்கியமான மெசஜை முழுக்க முழுக்க காமெடியாக சொல்லி சிரிக்க வைக்கும் இயக்குநர் பாண்டிராஜ்,
இறுதியில் இளைஞர்களுக்கான அறிவுரை ஒன்றை சொல்லி சிந்திக்க வைத்திருப்பதோடு,








