ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்.
VISUAL SPEECH
1. சுதீஷ்
2.பிரேமலதா விஜயகாந்த்
3.விஜயகாந்த்
தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் சேர்ந்து கொண்டாடும், உழைப்பின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் பண்டிகை.
இந்த பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தேமுதிக கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று மேற்கு சென்னை மாவட்டம் கொரட்டூா் பேருந்து நிலையம் அருகில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடபட்டது.
இந்த விழாவிற்கு வருகை தந்த கேப்டனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொங்கல் விழாவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.இதில் 100கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடடினர்.அப்போது தேமுதிக கட்சி கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் கேப்டன் விஜயகாந்த் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிரேமலதா மேடை பேச்சு
இந்தியா என்றால் இந்துக்கள் நாடு தான் அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை இந்தியா என்றால் கலாச்சாரம் மிக்க நாடு அதில் மாற்றுக்கருத்தில்லை அதேபோல் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வருகிறோம் பல மதங்களும் பல மொழிகளும் இருக்கிற இந்த நாடு இங்கு பிரிவினை என்பதற்கு இடமில்லை இதை பயன்படுத்தி தீவிரவாதம் செய்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை.









