



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு திரையரங்குகளில் நூறு சதவிகித இருக்கைகளில் மக்கள் அமர்ந்து படம் பார்த்து கண்டு களிக்க ஆணை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்த வேண்டுகோளை ஏற்று இன்று தமிழக முதல்வர் அவர்கள் திரையரங்குகளில் நூறு சதவிகித இருக்கைகளில் அமர்ந்து படம் பார்க்க ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசிற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இருகரம் குவித்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.









