வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் ‘கொன்றால் பாவம்’..!
EINFACH ஸ்டுடியோஸ், பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் தயாரிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் பூஜை இன்று (28.10.22) காலை சென்னையில் உள்ள வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.
1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் இருவரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.