சிம்புவின் பெருமிதம், நடிகை ஹன்சிகா நெகழ்ச்சி..!
தயாரிப்பாளர் வி.மதியழகன் தயாரிப்பில் இயக்குனர் ஜமீல் இயக்கி ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் சிலம்பரசன், ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகும் “மஹா” திரைப்படம் பற்றி நடிகை ஹன்சிகா என்ன சொல்கிறார்.என்னுடைய 50வது திரைப்படமான ‘மஹா’. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.

“ஒரே ஒரு ஃபோன்கால் தான் செய்தேன். உடனே சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நான் நன்றிகடன்பட்டுள்ளேன்’ என்று நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.”மஹா படம் எனக்கு வந்தபோது, இது எனது 50-ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50-ஆவது படமாக மஹா திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் படத்தில் நடிக்க என்னுடைய தாய் மிக முக்கியக் காரணம். அவர்தான், ‘நீ 50-வது படம் நடித்தால் அது மஹாவாகதான் இருக்க வேண்டும்’ என்று கூறினார்.’மஹா’ படத்தில் நடிப்பதற்காக சிம்புவிற்கு ஒரே ஒரு கால் தான் செய்தேன். அவர் உடனே சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார். அவர் இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

இப்படத்தின் பாடல்களை கார்கி, விவேகா, சௌந்தரராஜான் எழுத ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மதியழகன் எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ளார்.வரும் 22-ம் தேதி வெளியாகிறது.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாகி இருக்கிறது இந்த “மஹா” திரைப்படம்.