3 பட இயக்குனரின் மூன்றாவது படத்தில் ரஜினிகாந்த்..!
கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* . அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன் , நிர்வாக தயாரிப்பாளர் N சுப்ரமணியன் .

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று head of lyca production gkm தமிழ் குமரன் தெரிவித்தார் .