• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

by Tamil2daynews
July 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

முத்தையா முரளிதரன்: விதியை வெல்லும் மனிதன்!

 

கடந்த 2004ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம்  நாள்  ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்து கொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள இலங்கை நகரமான காலி (Galle) நகருக்கு மிக அருகில் உள்ள ஒரு இடத்தில் அவர் நாளைக் கழிக்க திட்டமிட்டிருந்தார். 16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றவாதிகளால் நிறுவப்பட்ட கோட்டையான பழைய நகரமான காலி (Galle) கோட்டைக்கு அந்த இடம் மிகவும் பிரபலமானது. முரளிதரன் அவரது மேலாளரான குசில் குணசேகரவால் நடத்தப்படும் ’பவுண்டேஷன் ஆஃப் குட்னஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கற்றல் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டிருந்தார். முரளிதரன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முதன்மை நன்கொடையாளர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் அடிக்கடி இதுபோன்ற விநியோக இயக்கங்களை ஏற்பாடு செய்தார். இது இன்றுவரை தொடர்கிறது.

டிசம்பர் 26, 2004 அன்று, முரளிதரன் அந்த இடத்தை முன்கூட்டியே அடைய வேண்டும். ஆனால், அவரது வருங்கால மனைவி மதி அவருடன் நிகழ்வில் கலந்து கொள்ள இருந்ததால் சிறிது தாமதம் ஏற்பட்டது. அதிகபட்சம் 15 நிமிடங்கள் தாமதம் ஆகியிருக்கும். ஆனால், அதுதான் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தியது. முரளிதரனின் கார் காலிக்கு (Galle) அருகில் உள்ள இடத்தை நெருங்கியதும், அவரது ஓட்டுநர் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டார். வழியில் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. இதனால், அவர் தனது காரை வீட்டிற்குத் திருப்ப வேண்டியிருந்தது.

முரளிதரன் பாதுகாப்பான தூரத்திற்குச் சென்ற 20 நிமிடங்களுக்குள் காலியை (Galle) சுனாமி தாக்கியது. சுனாமியின் அளவு மிக அதிகமாக இருந்தது. இதன் விளைவாக 11,000 பேர் இறந்தனர் மற்றும் 50,000 க்கும் மேற்பட்ட காயமடைந்து தங்கள் வீடுகளை இழந்தனர். காலி (Galle) நகரம் முழுவதுமாக நீருக்கடியில் சென்றது. மனித வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட 100 ஆண்டுகளில் இலங்கையைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவாகும்.

“நான் 20 நிமிடங்களுக்குள் அந்த அலையைத் தவறவிட்டேன். அந்த சமயத்தில் நான் கிளம்பிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக நான் உயிருடன் இருக்கிறேன். அலை 20 அடி (ஆறு மீட்டர்) உயரத்திற்கு மேல் இருந்தது. அது இரண்டு கிலோமீட்டர் உள்நாட்டிற்குள் (ஒரு மைலுக்கு மேல்) சென்றது” என முரளிதரன் ஏபிசியிடம் கூறினார். மேலும், “எங்கள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அங்கிருந்து வந்தவர்கள். அவர்களின் குடும்பம் எப்படி இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனது மேலாளர் பிழைக்கவில்லை. அவரது வீடு போய்விட்டது” என்று அவர் கூறினார்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முரளிதரன், தான் அதிர்ஷ்டசாலி என்று ஒப்புக்கொண்டார்.
எப்படி இருந்தாலும், இந்த பேரழிவிற்குப் பிறகு கிரிக்கெட் வீரர் முரளிதரன், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் கூட நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று நாட்டிலேயே மிகப்பெரிய நிவாரண இயக்கங்களில் ஒன்றை மேற்கொண்டார். விடுதலைப் புலிகள் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஊர்திகளில் முரளிதரன் பயணித்ததால் அனுமதித்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 வீடுகள் கட்டித்தரவும் முரளிதரன் முன்மொழிந்தார். இந்தத் திட்டம் அவரது மேலாளருக்கு மிகவும் அசாத்தியமானதாக தோன்றியதால், ’இத்தனை வீடுகளைக் கட்டுவது களத்தில் விக்கெட்டுகளை எடுப்பது அல்ல!’ என்று கூறினார். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்து முடிக்க முடியும் என அவர் நம்ப மறுத்தார். ஆனால், முரளிதரன் முரளிதரனாக இருப்பதால், அவரது சக கிரிக்கெட் வீரர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் உதவியுடன் வெளித்தோற்றத்தில் சாத்தியமற்றதாக கருதப்பட்ட இந்தப் பணியைச் செய்தார். இறுதியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 வீடுகளையும் கட்டிக் கொடுத்தார்.

முரளிதரனின் அந்த உறுதியும் தீர்மானமும்தான் களத்தில் அவரை சிறந்த கிரிக்கெட் வீரராகவும், அதற்கு வெளியே மனித நேயமிக்கவராகவும் ஆக்கியது. ஜூலை 22ஆம் தேதி முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி 13 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த அசாதாரண மைல்கல்லை விளையாட்டு உலகம் பிரதிபலிக்கும் போது, முரளிதரனின் இணையற்ற வாழ்க்கையை வரையறுக்கும் சின்னச் சின்ன தருணங்கள் மற்றும் உலக சாதனைகளை நினைவுகூர வேண்டிய நேரம் இது.

முரளிதரன் தனது வழமையான நடவடிக்கையிலிருந்து சுழல் பந்துவீச்சு கலையை மறுவரையறை செய்தார். இது விளையாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சச்சின் பேட்டிங்கில் முரளிதரன் பந்துவீச வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள். இரண்டு பேரையும் பெரும்பாலும் ஒப்பிட்டு பலரும் இரு ஆளுமைகளுக்கு இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டியுள்ளனர். சச்சின் மற்றும் முரளிதரன் அற்புதமான அமைதியான மனதைக் கொண்டவர்கள் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் கூட இவர்கள் தங்கள் அமைதியைக் காக்க முடியும். இதனால்தான் ரன் ஓட்டத்தை சரிபார்க்க வேண்டும் அல்லது வெற்றியை பார்க்கும்போது முரளிதரனை அவரது கேப்டன்கள் பந்துவீசச் சொன்னார்கள். இலங்கை அணி ஆட்டத்தை இழக்கும் தருவாயில் இருந்தபோது, அந்த அணியைக் காக்க முரளிதரனின் அற்புதமான சுழற்பந்து வீச்சு கைக்கொடுத்து பல பெருமையான தருணங்களையும் கொடுத்துள்ளது.

அவரை பலரும் பிராட்மேனுடன் ஒப்பிட்டு வருகின்றனர். ஸ்டீவ் வா உட்பட பலர் அவரை பந்துவீச்சாளர்களின் பிராட்மேன் என்று அழைத்தனர். ஆனால், முரளிதரனின் பயணம் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. விளையாட்டு வரலாற்றில் விதிகளை வளைத்த ஒரே கிரிக்கெட் வீரராக அவர் கவனத்தின் மையமாக ஆனார். அவரது தனித்துவமான பந்துவீச்சு, விவாதத்தையும் ஆய்வுகளையும் தூண்டியது. இடைவிடாத விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் முரளிதரன் தயங்காமல் துன்பங்களை சமாளித்தார். மீண்டும் மீண்டும் தனது திறமையை நிரூபித்தார். முரளிதரனின் பந்துவீச்சை அனுமதிக்கும் வகையில் இறுதியாக ஐ.சி.சி தனது விதிகளை மாற்றியது. இது கிரிக்கெட் உலகத்தில் இணையற்ற ஒரு விஷயமாக உள்ளது.Happy Birthday Muttiah Muralitharan: A Look at Records and Coaching Career  of Sri Lankan Spin Wizard - News18

கிரிக்கெட்டின் எல்லைகளுக்கு அப்பால், முரளிதரனின் கதை கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்ப் பின்னணியில் இருந்து வந்த அவர், பலதரப்பட்ட சிங்கள கிரிக்கெட் வீரர்களை ஒன்றிணைப்பதற்காக இனத்தின் தடைகளைத் தாண்டியவர். அவரது அசாத்திய திறமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை ஒன்றிணைக்கும் சக்தியாக மாறியது. மக்களை ஒன்றிணைப்பதில் விளையாட்டின் சக்தி அளப்பரியது என அவர் நம்பினார்.

முத்தையா முரளிதரன் இந்தியாவிற்கு வரும்போது, மற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களைப் போலல்லாமல், அவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், முரளிதரன்  பிறப்பால் இந்தியர் எனினும் இலங்கையின் குடியுரிமை பெற்றவர். ஒரு இந்திய குடிமகன். இருப்பினும், இந்தியாவில் இப்போது இரட்டைக் குடியுரிமை அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் OCI (Overseas Citizen of India) அட்டையை வைத்திருக்கிறார்.

முரளிதரனின் தாத்தாவான பெரியசாமி சின்னசாமி ஒரு தமிழர். அவரது குடும்பத்தில் இருந்து 1920களில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக இலங்கைக்கு குடிபெயர்ந்த முதல் நபர் ஆவார். இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் முத்தையா பிறந்தார். பணியில் ஓய்வு பெற்ற சின்னசாமி இந்தியா திரும்பினார். ஆனால், முத்தையா இலங்கையிலேயே தங்க முடிவு செய்தார். முத்தையா கண்டியில் தங்கி பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கினார். அது வணிகமாக வெற்றிகரமாக இருந்தது. முத்தையாவின் மூத்த மகன் முரளிதரன் ஏப்ரல் 17, 1972 இல் பிறந்தார்.

முரளிதரன் தனது பயணத்தில் 13 வருடங்களை நிறைவு செய்திருக்கலாம். அவரது புகழ் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களை அவர்களின் கனவுகளைத் துரத்தவும், எல்லைகளைத் உடைக்கவும் மற்றும் கிரிக்கெட் ஆடுகளத்தில் சாத்தியமானதை மறுவரையறை செய்யவும் தூண்டுகிறது.Muttiah Muralitharan's Journey: From the ground of woes to the pinnacle of  the sport - FeatureCricket

முத்தையா முரளிதரன் என்றென்றும் இந்த விளையாட்டை அலங்கரித்த மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நினைவுகூரப்படுவார். இதுவரை வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் அவரது சாதனை நிச்சயம் இருக்கும்.

’800’ திரைப்படம் இந்த ஆண்டு பல மொழிகளில் வெளிவர உள்ளது. இது முரளிதரனின் சிறுவயது முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையுடன் முரளிதரனின் பயணத்தை காட்டும்.

முரளிதரனின் கிரிக்கெட் சாதனைகள் குறித்தான பார்வை:
* டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை முத்தையா முரளிதரன் படைத்துள்ளார். 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
* ODI வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார் – 534 விக்கெட்டுகள்.
* டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனையை அவர் படைத்துள்ளார் – 67 முறை.
* டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனை -22 முறை.
* டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக பவுல்டு விக்கெட்டுகள் – 167 பவுல்டு மற்றும் 35 முறை கேட்ச் மற்றும் பவுல்டு  விக்கெட்டுகள் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
* டெஸ்ட் போட்டி வரலாற்றில் அதிக ஸ்டம்ப்டு விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனை – 47 முறை
* 63,132 பந்துகளில் – அதிக பந்துகளை வீசிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
* 1771 நாட்கள் – மிக நீண்ட காலத்திற்கு முதலிடத்தில் இருந்த உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
* டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ’மேன் ஆஃப் தி சீரிஸ்’ விருதுகள் – 11 முறை.
* சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டக்ஸ் – 59.
* ஒரே மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனையை அவர் படைத்துள்ளார். SSC- 167 விக்கெட்டுகள், கண்டி – 117 விக்கெட்டுகள், காலி – 111 விக்கெட்டுகள்.
* அவர் சொந்த மண்ணில் (இலங்கையில்) அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் – இலங்கையில் 493 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை படைத்தார்.
* 350,400,500, 600,700 டெஸ்ட் விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

Previous Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘லாக் டவுன் டைரி’ பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா

Next Post

தயாரிப்பாளர்-விநியோகஸ்தராக தடம் பதித்த பின்னர் தற்போது நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார்

Next Post

தயாரிப்பாளர்-விநியோகஸ்தராக தடம் பதித்த பின்னர் தற்போது நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார்

Popular News

  • ரூம்பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.