‘ஆர் யூ ஒகே பேபி’ – விமர்சனம்
எப்பொழுதுமே மீடியாக்களில் பரபரப்பாக பேசக்கூடிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையில், மங்கி கிரியேடிவ் லேப் தயாரிப்பில் வெளி வந்துள்ள படம் ஆர் யூ ஒகே பேபி.
திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் விங் டுகெதரில் வாழும் தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக இந்த குழந்தையை, கேரளாவில் வாழும் குழந்தை இல்லாத பணக்கார கணவன் -மனைவிக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார்கள் லிவிங் டு கெதர் தம்பதிகள்.
மாறாக காவல் துறை குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் உள்ளது என்ற கோணத்தில் தத்து பெற்ற கேரள தம்பதிகள் மீது வழக்கு பதிவு செய்து, குழந்தையை கைப்பற்றி சென்னையில் உள்ள காப்பாகத்தில் சேர்த்து விடுகிறது. நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி கையாளுகிறது என்ற அடிப்படையில் கதை நகர்கிறது.
எத்தனை செல்வங்கள் இருந்தாலும், குழந்தை செல்வங்கள் தான் மிகப்பெரிய செல்வம் என்பதை வசனங்களால் இல்லாமல் தனது நடிப்பால் உணர்த்தி விடுகிறார்கள் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி.ஒரு பக்கம் வறுமை,மறுபக்கம் தான் பெற்ற குழந்தை மீது என ஒரு மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார் முல்லையரசி.
மனித உணர்வுகளுக்கு இசை வடிவம் தருவதில் தான் ஒரு ராஜாதான் என்பதை மீண்டும் உணர்த்தி இருக்கிறார் இளையராஜா. ராஜா சாரின் இசை எமோஷனலுக்கு வலு சேர்க்கிறது. தாய்மையின் அன்பையும், சில சட்ட சிக்கல்களையும், இந்த சிக்கல் கலையப்பட வேண்டிய அவசியத்தையும் சொல்கிறது ‘ஆர் யூ ஒகே பேபி.’