‘எக்கோ’ விமர்சனம்
ஶ்ரீ விஷ்ணு விஷன்ஸ் சார்பாக டாக்டர் ராஜசேகர் தயாரிப்பில், நவீன் கணேஷ் இயக்கத்தில், ஶ்ரீகாந்த் – வித்யா பிரதீப் – பூஜா ஜவெரி – ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “எக்கோ”.
அழகான திருமண வாழ்க்கையில் படம் ஆரம்பிக்கின்றது.
ஸ்ரீகாந்த் வித்யா பிரதீப்பும் கணவன் மனைவியாக அழகான நாட்களை கடந்து போய்க் கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென பூதாகரமாய் வருகிறது அந்த சத்தம்.
இதை பலமுறை ஸ்ரீகாந்திடம் சொல்லி அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை ஒரு மனநல மருத்துவர்கள் பார்க்கலாம் என்று இதயபுரத்தை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க அவரும் இவர் பெரிய விஷயம் அல்ல நல்லா தூங்குங்கள் என்று மாத்திரை கொடுக்கிறார்.டாக்டர் கொடுத்த மருந்துகளை சாப்பிட்ட பின்பு வித்யாவுக்கு அதே மாதிரியான உணர்வுகளும் தொந்தரவுகளும் ஏற்படவே ஒரு கட்டத்தில் அது முற்றிவிடவே தற்கொலைக்கு முயழ்கிறார்.
தன் மனைவியான வித்தியா பிரதீப் மறைந்த பின்பு மன உளைச்சல் இருந்த ஸ்ரீகாந்திருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது இரண்டாவது மனைவி யார் என்றால் அவருடைய முன்னாள் காதலியும் அவர் வேலை செய்யும் கம்பெனி முதலாளியின் மகளும் ஆன பூஜா திவாரி.
தனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்று தெரியாமல் ஒருவரை சந்திக்க அவர் மூலம் உண்மை வெளிவருவதே படத்தின் கதை.படத்துல ஸ்ரீகாந்த் வித்யா பிரதீப்பும் கணவன் மனைவியாக சூப்பரா வாழ்ந்து இருக்காங்க அதிலும் ஸ்ரீகாந்த் தன் மனைவிக்கு செய்யும் துரோக காட்சிகளிலும் அவர் முன்பு நல்ல ஒரு போல் நடிப்பதிலும் இரண்டு விதமான மாறுபட்ட வித்தியாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஸ்ரீகாந்தின் அம்மா கதாபாத்திரத்தில் வரும் ராஜா ராணி சிவகாமியான பிரவீனாவிற்கு, ஊரை நினைத்தும், மகனை நினைத்தும், துயர் கொள்ளும் கதாபாத்திரம். அவரின் திருமணத்தால் தான் ஊரில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தது, கோயில் பாழடைந்து போனது என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பின்கதை படத்தில் மருந்துக்குக் கூட சொல்லப்படவே இல்லை. அந்த ஊராரின் பழிச் சொல்லை மறக்கச் செய்யவே வித்யா பிரதீப்பிற்கும் ஸ்ரீகாந்திற்கும் திருமணம் நடக்கிறது என்கின்ற சப்பைக்கட்டு வேறு. சிறந்த நடிகர்களான டெல்லி கணேஷ், காளி வெங்கட் போன்றோர் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு போகின்றனர்.
படத்தில் பாராட்டக்கூடிய ஒரே ஒருவர் கேமராமேன் கோபிநாத் மட்டுமே.தன் வேலையை மிகக் கச்சிதமாக முடித்திருக்கிறார்.ஒரு நல்ல கதையை எந்தவிதமான விதத்தில் கையாள வேண்டும் என்பதில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
பேராசை பெரு நஷ்டம்..!
தன்வினை தன்னை சுடும்..!
ஹீரோவின் பேராசை உயிர் நஷ்டத்தை கொடுத்திருக்கின்றது.








