மைலாஞ்சி – விமர்சனம்
அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் க்ருஷா குரூப் நடிப்பில் உருவாகியுள்ள “மைலாஞ்சி” ஒரு உணர்வுபூர்வமான மற்றும் மாறுபட்ட காதல் கதையாகும். இளையராஜா இசையில் பாடல்களும், செழியனின் ஒளிப்பதிவும் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. பறவைகளைப் படம் பிடிக்கும் நாயகனைச் சுற்றியும், காதலின் சிக்கல்களையும் இப்படம் பேசுகிறது.
படம் ஒரு கவித்துவமான காதல் கதையாகவும், காதலில் நுணுக்கமான உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது.
பறவைகளைப் படம் பிடிக்கும் புகைப்படக் கலைஞரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, காதலின் ஆழத்தைப் பேசுகிறது.
பொதுவாக இது மாதிரி மெல்லிய கதைகளை கையாளும் இயக்குனர்கள் கதையில் கவனத்தை விட்டு விட்டு ஒளிப்பதிவு கவனம் செலுத்துவது வழக்கம் .இது அஜயன் பாலாவுக்கு விதிவிலக்கு அல்ல.
ஒளிப்பதிவு செழியன் அடடா கேமரா அபாரம் காடுகளின் இயற்கையையும் பறவைகளையும் மெல்லிய சத்தத்தையும் மிக அற்புதமாக ரம்யமாக படம் பிடித்து இருக்கிறார்.
அழகான காதல் கதையை இவ்வளவு ஆழமாக யோசித்த இயக்குனர் திரைக்கதையை இன்னும் சற்று கவனமாக கையாண்டு இருக்கலாம்.ஏனென்றால்ஒரு சில இடத்தில் படத்தின் காட்சிகள் உச்ச கொட்ட வைக்கின்றது.
காதலை இவ்வளவு கவித்துவமாக சொல்ல முடியுமா என்று கேட்டால் அது அதே என்பாலாவால் மட்டுமே சொல்ல முடியும் கேமராவை காதலிக்கும் அவர் இந்த கதையை எத்தனை வருடங்களாக காதலிக்கிறார் என்பது திரையில் தெரிகிறது.
மொத்தத்தில் இந்த மைலாஞ்சி எல்லோருக்கும் பிடித்த வஞ்சி.









