சென்னை: அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகெளரி ப்ரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியான், மதுரை முத்து, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹாப்பி ராஜ்’ (Happy Raj
ஜி.வி. பிரகாஷ் குமார் எப்படியாவது ஒரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், இந்த படம் அவருக்கு வெற்றிப் படமாக கண்டிப்பாக மாறும் என்றே தெரிகிறது.
முதல் காட்சியிலேயே தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடித்த பிரார்த்தனா நாதன் குதிரை முட்டை மருமகளாக முடியாது என்கிற காரணத்தை சொல்லியே ஹாப்பியின் காதலை பிரேக்கப் செய்கிறார்.
.jpg)
.வி. பிரகாஷ் இந்த படத்தில் ஹாப்பி ராஜாக நடிக்க ரொம்பவே முயற்சி செய்துள்ளார். முதல் சீனில் இருந்து பாதி படம் வரை அவரது அலப்பறைகள் தான். ஆனால், அவை எதுவுமே பெரிதாக ரசிகர்களை கனெக்ட் செய்யவில்லை. முதல் பாதியில் வரும் காட்சிகள் எல்லாமே கிரிஞ்ச் படத்திற்கு வந்து சிக்கிக் கொண்டோமா? என்கிற டவுட்டைத் தான் கிளப்பின.
.வி. பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீகெளரி ப்ரியா, கீதா கைலாசம் என முன்னணி நடிகர்களின் நடிப்பு மொத்தமும் படத்துக்கு பெரிய பிளஸ் ஆகவே உள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் “ஆடினே இருப்பேன்” பாடல் வைப் ஆக்குகிறது. பின்னணி இசை பெரிய பலமாக உள்ளது. பெங்களூர் மற்றும் கோவை அழகை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் மொத்த படத்தையே கலர்ஃபுல்லாக கொடுத்துள்ளார். ஒரு போட்டோ எடுக்கும் ஷாட்டில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருக்கும் காட்சி அழகு.
எடிட்டர் செல்வா ஆர்.கே. முதல் பாதியில் பல வேலைப்பாடுகளை செய்து போர் அடிக்காமல் காப்பாற்றியுள்ளார். சப்பாணியின் மகன் முழுசா பொறந்ததே பெரிய விஷயம். என் மகன் ஊனமா பொறக்காததால இன்னொரு குழந்தை கூட பெத்துக்கல போன்ற வசனங்களும் சிறு வயதில் ஹீரோவாக தெரியும் அப்பாக்கள், மகன்கள் வளர்ந்தவுடன் வில்லனாக தெரிவது ஏன்? என்கிற கேள்வியை எழுப்பியுள்ள விதமும் அதற்கு வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் அட்டகாசம். அந்த ரயில் காட்சியும் படத்திற்கு பெரிய பிளஸ். மைனஸ்: ஆரம்பத்திலேயே சொன்னது போல முதல் பாதி படத்தில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன. பல காமெடி காட்சிகள் சரியாக உட்காரவில்லை. ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஏற்படும் காதல் முதல் அதை புரபோஸ் செய்ய சிகரெட்டை பயன்படுத்திய விதம் என பல குறைகள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் 2ம் பாதியில் சொல்லப்பட்டுள்ள நல்ல கருத்துக்கள் மற்றும் முதல் பாதியில் கிரிஞ்சாக தெரிந்த காட்சிகளை எல்லாம் சரிகட்டியது என படம் கடைசியில் ரசிக்க வைத்து விட்டது. அப்பா மற்றும் மகன்கள் கொண்டாடும் வெற்றியாக இந்த படம் அமையும்.








