தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் தீபன் பூபதி மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழில்முனைவோர், டாட்டூ கலைஞரான நிவேதிதா கிரி ஆகியோர் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் திரைப்படத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தீபன் பூபதி, தரமான கதைக்களங்களையும் புதுமையான திரைப்பட முயற்சிகளையும் ஆதரித்து வருபவராக அறியப்படுகிறார். அவர் தயாரித்த ‘புரியாத புதிர்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் இரண்டாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றது.
திருமண நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற குடும்பக் கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திரையுலகினர், தொழில்முனைவோர் வட்டாரங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பலரும் தீபன் பூபதி – நிவேதிதா கிரி தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.








