சாருகேசி – விமர்சனம்
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ‘சாருகேசி’. கர்நாடக இசையை மையமாகக் கொண்டு, ரத்தம் மற்றும் வன்முறை இல்லாத ஒரு குடும்பத் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
புகழ்பெற்ற மேடை நாடகமான ‘சாருகேசி’-யை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பாரம்பரிய இசைக்கலைஞரின் கலைப் பாரம்பரியம், உறவுகள் மற்றும் அவர் சந்திக்கும் சவால்களைப் பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான படைப்பாகும்.
ஒய்.ஜி.மகேந்திரனின் நடிப்பு மிகவும் அபாரமாக உள்ளது. ஒய் ஜி மகேந்திரன் நடிக்கவில்லை சாருகேசி கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் இந்த வயதிலும் நிமிர்ந்து நிற்கிறார்.
இவருடன் இணைந்து சத்யராஜ்,இவர் வரும் காட்சிகளில் தன்னம்பிக்கையே இல்லாமல் வாழ்க்கையில் நாம் தோற்று விட்டோம் என்று நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சத்யராஜ் வரும் ராகதேவன் கதாபாத்திரம் மறுவாழ்வை அவர்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை தரும். சமுத்திரக்கனி,
பெரிய இசை ஜாம்பவானுக்கு உதவியாளராக வரும் தலைவாசல் விஜய்.அந்த கதாபாத்திரத்தில் ஜொலித்து மிளிர்கிறார்.தலைவாசல் விஜய், சுஹாசினி மணிரத்னம், ரம்யா பாண்டியன் மற்றும் மதுவந்தி அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இசை: இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். சங்கர் மகாதேவன் பாடியுள்ள பாடல்கள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
முழு படத்தையுமே முதுகில் தாங்கி நிற்கும் ஒரே ஒரு ஜீவன் தேனிசைத் தென்றல் தேவா தான் தேவாவுடன் இசையில் படம் பார்க்கும் அனைவரும் கொன்று விடுவது நிச்சயம் அந்த அளவுக்கு கர்நாடக இசை தியேட்டரில் ரீங்கார மிடுகின்றன.
சமுத்திரகனி சர்க்கஸ் பற்றி சொல்லும் உண்மைகளையும் அதை படம் பிடிக்க வரும் மதுவந்தியம் தனது கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.
மருமகளாக வரும் ரம்யா பாண்டியனும் தனது கணவரும் மிகச் சிறப்பாக நடிப்பை கொடுத்து வெளிப்படுத்தி உள்ளனர்.
மாஸ் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இப்படி ஒரு படம் என்று கேட்கும் ரசிகர்களுக்கு ஏற்கனவே இசை கலந்த ஒரு படத்தை சங்கமம் என்ற பெயரில் ரகுமான் நடிப்பில் அவர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தத்தில் இந்த சாருகேசி ஊர் உன்னத கலைஞனின் வாழ்க்கை வரலாறு.








