பேசிட்டு வரேன் தமிழ் சினிமாவில் அவ்வப்போது வித்தியாசமான கதைகள் திரைப்படமாக வருவதுண்டு அது மாதிரி ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்ஸி.
இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கி, சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் டபுள் ஆக்குபன்சி.இந்த படத்தை ஏ.சி.எஸ் அருண்குமார், குஷ்புவின் ஆவ்னி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படி இருக்கையில் இருவருக்கும் பொதுவாக ரஜினி என்று பெயர் வைக்கிறார்கள். இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்கவே பிடிக்காது. இருவரும் வளரும் வரை அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர் இவர்கள் குறித்து ஒரு சிலருக்குத் தெரிய வருகிறது. அதேபோல் இருவருக்கும் ஏற்படும் காதலுக்கும் இவர்கள் மாறுவது பிரச்னையாகிறது. மேலும் வில்லனுக்கும் தெரிந்துவிடுகிறது, அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் கதை ஒரு ஜனரஞ்சகமான படத்திற்கு ஏற்ற வித்தியாசமான கதைதான். மேலும் ஜனரஞ்சகமான படம் என்றால் அரைத்த மாவைத்தான் மீண்டும் அரைப்பார்கள் என்ற புள்ளியில் இருந்து மொத்தமாக மாறுபட்டு இந்த கதையை அமைத்து ஒரு நேர்த்தியான படத்தைக் கொடுத்துள்ளார்கள். அதற்காகவே தனி பாராட்டுக்கள்.

பக்ஸ் பகவதி பெருமாள் தான் வில்லன் என்றாலும் அவருக்கு பெரிய அளவில் வேலை இல்லை. கதையில் வில்லனுக்கும் பெரிய போர்ஷன் இல்லை. ஆனாலும் அவர் வருகிற காட்சிகளும் நன்றாகவே உள்ளது. இன்னொரு ரஜினி எல்லாம் கிடையவே கிடையாது, ஒரே ரஜினிதான் என்று கூறும் காட்சி அப்லாஸ். படத்தில் ரொமாண்டிக் காட்சிகள் நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் ரஜினியும் பெண் ரஜினியும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள போன் பயன்படுத்தும் டெக்னிக் சிறப்பு. இரண்டாம் பாதியில் வரும் ஒரு டூயட் பாடலுக்கு கிட்டத்தட்ட ஒரு நிமிட காட்சியை நேர்த்தியாக படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் சாந்தகுமார்.

சில லாஜிக்கான விஷயங்களை தவிர்த்து விட்டு படம் பார்த்தால் குடும்பத்தோடு பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் இந்த நேரத்தில் இந்த படம் படம் பார்க்கும் அனைவருக்கும் குதூகலத்தை தரும் என்பது சந்தேகம் இல்லை.








