
தமிழ் சினிமாவில் 12 B படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகைகள் மத்தியில் பெரும் கனவு கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் ஷ்யாம்.இவர் தமிழ் சினிமாவில் அன்றைய கால கட்டத்தில் பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இவர் பல படங்களில் முன்னணி நடிகராக நடித்து தமிழ் சினிமா மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் நடித்து வெளியான படங்களான லேசா லேசா, அன்பே அன்பே, இயற்கை போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்தவர்.

இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்து அந்த மொழி சினிமா சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் அந்த மொழி சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை நடித்துள்ளார்.

இவர் அண்மையில் சூதாட்டம் ஆடியதாக இவரது மீது புகார் வந்ததை அடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து பின்பு விடுவித்தனர்.அவரது நுங்கம்பாக்கம் வீட்டில் அவர் சூதாடியது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.மேலும் இந்த செய்தியானது தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் நடிகர் ஷ்யாம் அவர்கள் தற்போது ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
நான் விளையாடிற்காக சீட்டு கட்டு விளையாடி இருந்து வந்தேன் அனால் எனக்கு ஆகாத ஆட்கள் நான் பணம் வைத்து விளையாடியதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.நான் காவல் நிலையத்திற்கு சென்ற கையெழுத்து போட்டுவிட்டு ஐந்தே நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விட்டேன் என கூறியுள்ளார்,மேலும் அவர் சற்று உடல் இடை கூடி தொந்தியும் தொப்பையுமாக காட்சி யளித்துள்ளார்.









