

ரஜினிகாந்த் போன் செய்து சொன்ன வார்த்தைகள் தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ராக்கி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வழங்கிய ராக்கி படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் வசந்த் ரவி, பாரதிராஜாவை நேரில் வரவழைத்து பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்து வாழ்த்தியுள்ளார்.


அது குறித்து விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
*Vignesh Shivan*
@VigneshShivN
Got a call from #Thalaivar @rajinikanth
His appreciation for me & Nayan for presenting #Rocky his words about the film are still ringing in my ears!
This gesture of #Thalaivar gives us so much confidence. The feeling is just unexplainable
தலைவர் ரஜினிகாந்த் போன் செய்து பேசினார். ராக்கி படத்தை வழங்கியதற்காக என்னையும், நயனையும் பாராட்டினார். மேலும் அவர் படம் பற்றி கூறியது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
தலைவரின் இந்த செயல் எங்களுக்கு நிறைய நம்பிக்கை அளிக்கிறது. அந்த ஃபீலிங்கை விவரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த ரஜினி ரசிகர்களோ, தலைவரின் அடுத்த படத்தை இயக்கும் நபர்களின் பட்டியலில் விக்கியின் பெயரை சேர்த்துவிட வேண்டியது தான் என்கிறார்கள்.









