• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

by Tamil2daynews
September 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது.

படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், “இம்மார்டல்” திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்தின் உருவாக்கம், கதைக்களம் மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் விழாவை மேலும் சிறப்பாக்கின.
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது..,
இந்தக் கதையை இயக்குநர் மாரியப்பன் சின்னா முதன்முதலில் என்னிடம் கூறியபோது, ‘இது ஹாலிவுட் படம் போன்று இருக்கிறது. இதை எப்படி சாத்தியப்படுத்த முடியும்?’ என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அவர் கூறிய விஷுவல் கிரியேஷன்கள் மிகப் பெரிய சிஜி பணிகளைக் கொண்டதாக இருந்தன. ஆனால், இயக்குநர் சுமார் ஏழு மாதங்கள் வெளிநாட்டில் உள்ள ஸ்டூடியோவில் பணியாற்றி, படத்தின் விஷுவல் மாடலைத் தயாரித்து என்னிடம் கொண்டு வந்தார். ‘சார், நீங்கள் இதுவரை பார்த்த சாதாரண தமிழ் படம் போல் இது இருக்காது. ஹாலிவுட் தரத்தில் இதை உருவாக்க முடியும்’ என்ற அவரது நம்பிக்கையே என்னையும் இந்தப் படத்தை தயாரிக்கத் தூண்டியது.

படப்பிடிப்பிற்கு முன்பாகவே நீண்ட காலம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டோம். அந்தத் தயாரிப்புப் பணிகள் மூலம் படத்தின் காட்சிகள் மற்றும் சிஜி தொடர்பான விஷயங்களை மிகவும் கவனமாகத் திட்டமிட்டோம். அதன் பிறகு ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்தில் இணைந்தார். அவர் மிகுந்த உற்சாகத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் படப்பிடிப்பில் பங்கேற்று எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பை வழங்கினார். நான் தனிப்பட்ட முறையில் ஜி.வி. பிரகாஷ் சாரின் ரசிகன். அவர் இந்தப் படத்தில் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதாநாயகி தேர்விலும் இயக்குநர் மிகவும் கவனமாக செயல்பட்டார். சமூக வலைதளங்கள் மூலமாக கயாது லோஹரை பார்த்து, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரை அணுகினோம். படத்தில் அவர் மிகவும் பொருத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகள் சவாலான சூழ்நிலைகளில் படமாக்கப்பட்டன. குறிப்பாக, பல்வேறு ஆக்‌ஷன் மற்றும் ஃபேண்டஸி காட்சிகளை உருவாக்குவதில் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் முழுமையாக உழைத்துள்ளனர். ஒரு தயாரிப்பாளராக கலைஞர்கள் பாதுகாப்பாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் பணியாற்ற வேண்டும் என்பதில் நான் மிகுந்த கவனம் செலுத்தினேன்.

‘இம்மார்டல்’ ஒரு சாதாரண திரைப்படமாக இருக்காது என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். காட்சியமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், இசை, கிரியேஷன் என அனைத்திலும் ஹாலிவுட் தரத்தை நோக்கி படத்தை உருவாக்கியுள்ளோம். இதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தியுள்ளோம். குறிப்பாக, விஷுவல்ஸ் மற்றும் சிஜி பணிகளுக்காக படக்குழு மிக நீண்ட காலமாக உழைத்துள்ளது. இந்தப் படம் உருவாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு உள்ளது. இயக்குநர் மாரியப்பன் சின்னா இந்தப் படத்திற்காக தனது முழு முயற்சியையும் அர்ப்பணித்துள்ளார். அவரது கனவு மற்றும் உழைப்பின் விளைவாக இந்தப் படம் இன்று மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, இசை, சவுண்ட், எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுடன் இருந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இம்மார்டல்’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் விஷுவல் அனுபவத்திலும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். படம் வெளியான பிறகு உங்கள் அனைவரின் ஆதரவும், கருத்துகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம். இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது..,
“இது மிகவும் வித்தியாசமான படம். இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். சுமார் ஒரு வருடம் உழைத்து சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சர்வைவல் திரில்லராகவும் இருக்கும். சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றியும் கதை நகர்கிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் கொண்டு சென்றுள்ளார். புதிய தயாரிப்பாளர் மற்றும் புதிய இயக்குநர் இணைந்து பெரிய கனவுடன் உருவாக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை ஹாலிவுட் தரத்தில் இருந்ததால் எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை; முற்றிலும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சி.

கயாது லோஹர் இந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படத்தை ரசிப்பார்கள். மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கார்த்தி அவர்களின் கதாபாத்திரம் திரையரங்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. சாம் சி.எஸ். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக மிகுந்த உழைப்பை வழங்கியுள்ளார். அவருடைய பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

‘இம்மார்டல்’ படத்தை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் திரையரங்கில் சென்று பார்க்கலாம். டிரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பைப் போலவே படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், புதிய இயக்குநர்கள் மற்றும் புதிய தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. நான் நடித்த பல படங்களில் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், மாரியப்பன் சின்னா மற்றும் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.
இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது..,
“இந்தக் கதையை உருவாக்கியதில் இருந்து படமாக்குவது வரை ஏராளமான சவால்களை சந்தித்தோம். இது வழக்கமான திரைப்படம் அல்ல என்பதால், ஒவ்வொரு காட்சியையும் புதிதாக யோசித்து உருவாக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு முழு சுதந்திரத்தையும் ஆதரவையும் வழங்கிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு முதலில் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் கதையைக் கேட்டதும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் இணைந்தார். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக உருவாக்குவதற்காக அதிகம் யோசித்து உழைத்தார். எடிட்டர் சான் லோகேஷ், பின்னர் இணைந்த ராஜேஷ் ஆகியோரும் படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கயாது லோஹர் இந்தக் கதாபாத்திரத்திற்காக மிகப்பெரிய முயற்சியை எடுத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத நிலையிலும், ஒவ்வொரு வசனத்தையும் புரிந்துகொண்டு சரியாகப் பேசுவதற்காக கடுமையாக உழைத்தார். சவாலான படப்பிடிப்பு சூழல்களிலும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக ஆக்‌ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டன. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., சவுண்ட் டிசைன் குழுவினர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

‘இம்மார்டல்’ ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் படம். இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்காத வகையிலான விஷுவல் மற்றும் சவுண்ட் அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொருவரின் உழைப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும்,” அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது..,
இம்மார்டல் எனக்கு மிகவும் முக்கியமான படம், சில  படங்கள் செய்யும்போது இது தனித்துவமாக இருக்குமென நமக்கு தெரியும் அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்த படம்.

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்குமார் மிகவும் எனர்ஜியான மற்றும் பாசிட்டிவான மனிதர். ஒரு படத்தை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வமும், படக்குழுவினர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். அவர் செய்யும் உதவிகளைக்கூட வெளியே சொல்லிக்கொள்ள விரும்பாத நல்ல மனிதர். ஜி.வி. பிரகாஷ் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், நடிகராகவும் இந்தப் படத்தில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவமும், ஸ்கோப்பும் உள்ளது. அவர் அதை மிகவும் அழகாக செய்திருக்கிறார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னாவும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். ஒவ்வொரு இயக்குநருடனும் பணியாற்றும் அனுபவம் வித்தியாசமானது. அந்த வகையில், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவும் ஒரே நோக்கத்துடன் இணைந்து உழைத்திருப்பது திரையில் நிச்சயம் தெரியும். என்னுடன் இந்தப்படத்தில் உழைத்த அனைத்து குழுவினருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் பேசியதாவது..,
“இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது மிகப்பெரிய பட்ஜெட்டில், உயர்தர தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் என படக்குழுவினரின் நேர்மையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தெரிகிறது.குறிப்பாக, தமிழ் சினிமாவில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை இவ்வளவு தரமாக உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. ஜி.வி. பிரகாஷ் எப்போதும் தனது பணியில் அபாரமான ஆற்றலுடன் செயல்படுபவர். எத்தனை படங்களில் நடித்தாலும், எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் அவரது உழைப்பும் வேகமும் குறைவதில்லை. அவர் வாங்காத தேசிய விருது இல்லை ஆனாலும் ஓடிக்கொண்டே இருக்கிறார்.  அதேபோல், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் விஷனும் மிகப்பெரியது. ஒரு தயாரிப்பாளராக அவர் இந்தப் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும், பிரமாண்டமாக படத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தும் முயற்சியும் பாராட்டுக்குரியது. நல்ல இயக்குநர்கள் மற்றும் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கும் தயாரிப்பாளராக அவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன்.

‘இம்மார்டல்’ ஒரு அழகான ரொமான்டிக் கதையுடன், பிரமிப்பூட்டும் விஷுவல்ஸ் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், ஒவ்வொரு ஃப்ரேமின் பின்னாலும் படக்குழுவினர் செய்திருக்கும் உழைப்பை ரசிப்பார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்,” என்றார்.

நடன இயக்குநர் சபரீஷ் பேசியதாவது..,
“இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். குறிப்பாக, இது எனது முதல் படத்தைப் போன்ற ஒரு உணர்வை எனக்குக் கொடுக்கிறது. அதே நேரத்தில், இது எங்களின் இரண்டாவது திரைப்படமாகும் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அருண் அண்ணா, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் தேவை. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது..,
“இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனக்கு முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்திய தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு மிகப்பெரிய நன்றி. இந்தப் படத்தின் பணிகளில் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.

மேலும், எனது குரு மற்றும் அவருடன் பணியாற்றிய அசோசியேட் நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் வழிகாட்டுதலும் ஆதரவும் எனது பயணத்தில் மிகவும் முக்கியமானது. ‘இம்மார்டல்’ திரைப்படம் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். இது அனைவரும் இணைந்து உழைத்த படம் என்பதால், உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும்.

நடிகர்  டி.எம். கார்த்தி பேசியதாவது..,
“சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் இந்தக் கதையை என்னிடம் கூறினார். அப்போது பேசிய கதாபாத்திரத்தை தற்போது இன்னும் விரிவுபடுத்தி முழு நீள கேரக்டராக உருவாக்கியிருந்ததால், இந்தப் படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு இசைப் போட்டியில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு பரிசு வழங்கியது இன்னும் நினைவில் உள்ளது. இப்போது அவருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.

‘இம்மார்டல்’ மிகவும் வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. இதில் வழக்கமான மாஸ் என்ட்ரி இருக்காது, ஆனால் மாஸ் ரசிகர்கள் உட்பட அனைவரும் ரசிக்கும் வகையில் படம் இருக்கும். தயாரிப்பாளர், இயக்குநர், ஜி.வி. பிரகாஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் குமார் நடராஜன் பேசியதாவது..,
“பெரும்பாலும் சின்ன சின்ன கேரக்டர்களில்தான் நடித்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்தில் எனக்காகவே மனதில் வைத்து எழுதப்பட்ட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கேரக்டரை நான் மிகவும் ரசித்து நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என அனைவரின் ஒத்துழைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தமிழ் தெரியாத நிலையிலும் நாயகி தமிழ் வசனங்களை மிகவும் அழகாகப் பேசி நடித்தது என்னை வெகுவாக கவர்ந்தது.

இது மொபைல், டிவி அல்லது ஓடிடியில் சாதாரணமாக பார்க்க வேண்டிய படம் அல்ல. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது..,
‘“ஜி.வி. பிரகாஷ் சார் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை ஆதரிப்பவர். இந்தக் கதையைக் கேட்டதுமே இது ஒரு எக்ஸ்பெரிமென்டல் முயற்சி என்பதால் கண்டிப்பாக நீ செய்ய வேண்டும் என்று கூறினார்.

படப்பிடிப்பின்போது பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக சில இடங்களில் படப்பிடிப்பு மிகவும் சவாலாக இருந்தது. இருந்தபோதும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் எந்தவிதமான தயாரிப்பு ரீதியான தடையும் ஏற்படுத்தாமல், எவ்வளவு நாட்கள் எடுத்தாலும் படத்தை தரமாக உருவாக்க வேண்டும் என்று முழு ஆதரவும் சுதந்திரமும் அளித்தார். அதுவே இந்தப் படம் இவ்வளவு தரமாக உருவாக முக்கிய காரணம்.

படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ‘இம்மார்டல்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்,” என்றார்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், “டிராகன்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன் கலக்கலான கமர்ஷியல் படமாக “இம்மார்டல்” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா.

சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன.

பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் – மாரியப்பன் சின்னா
தயாரிப்பு – அருண்குமார் தனசேகரன்
தயாரிப்பு நிறுவனம் – AK Film Factory
ஒளிப்பதிவு – அருண் ராதாகிருஷ்ணன்
இசை – சாம் சி.எஸ்.
எடிட்டிங் – ஷான் லோகேஷ்
கலை இயக்கம் – சிவசங்கர்
ஸ்டண்ட் – சக்தி சரவணன்
விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா
நடனம் – சபரீஷ்
ஆடை வடிவமைப்பு – வினோத் சுந்தர், தமிழ்செல்வன் U
DI – Get In Dream Studio
கலரிஸ்ட் – ஸ்ரீராம்
VFX – R. மஹி
ஸ்டில்ஸ் – இ. ராஜேந்திரன்
காஸ்ட்யூமர் – ரவி தேவராஜ்
ஒப்பனை – P. மாரியப்பன்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

Previous Post

லியோ விஷன் நிறுவனம் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ படத்தின் அறிவிப்பு..

Next Post

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Next Post

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Popular News

  • திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ பாடலில் ஹிருது ஹரூனின் எனர்ஜியும் கண்கவர் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் ‘கிங் 100- KING 100 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அருள்நிதி – அமீர் நடிப்பில் ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

September 2, 2026

ராஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே – அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் இணையும் ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

September 2, 2026

அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

September 2, 2026

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படம் – இளைய திலகம் பிரபு, விஜய் வர்மா நடிப்பில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் படப்பிடிப்பு தொடக்கம்

September 2, 2026

எம். எஸ். பாஸ்கர் நடிப்பில் ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

September 2, 2026

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா !!

September 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.