பள்ளியில் பி.டி ஆசிரியராக இருக்கிறார் ராஜன் (கிஷோர் குமார்). அவரது மனைவி வித்யா (சுபத்ரா) அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். ராஜனுக்கு டிவியில் நடக்கும் பாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வருகிறது. அதில் பிரபலமாகிறார். போட்டியில் அவர் வெல்வாரா, இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதனால் பி.டி. மாஸ்டராக இருக்கும் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டி இருக்கிறது. இது அவரது ஆசிரியர் வேலையை பறிக்கிறது. பின்னர் குடும்பத்தில் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கும் போது அவரது இரண்டு பிள்ளைகள் கதி என்னவாகிறது என்பதே கதை.
கிஷோர் இதுவரை படங்களில் அதிகமாக பாடல் பாடி நடித்ததுபோல் பார்த்த ஞாபகம் இல்லை, இந்த படத்தில் அவர் பாடகராக மாறி அதற்கு ஏற்ப தனது நடிப்பை அலட்டிக் கொள்ளாமல் வழங்கி இருக்கிறார், அவ்வப்போது அவருக்கு காஸ்டியூம் மாற்றம் செய்திருப்பது புத்திசாலித்தனம்உச்சகட்ட சாயல் பாடலுக்கு கிஷோர் அழுத்தம் கொடுத்து நடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
கிஷோர் பிள்ளைகளாக நடித்திருக்கும் தனன்யா வர்ஷினி, ஜஸ்வந்த் மணிகண்டன் இருவருமே கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்தில் சில இடங்களில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் போட்டி பாடலுக்கு உச்ச சாயலில் இசையமைத்து ஒரு பாடலை மனதில் பதிய வைக்கிறார் இசை அமைப்பாளர் சங்கர் ரங்கராஜன்.
ஒரு மென்மையான கதையை இசை லயத்துடன் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் திரவ். இவரே படமும் தயாரித்திருக்கிறார். ஆக்சன், அதிரடி, மர்மம், பேய் கதை என்று பல்வேறு ஜர்னர்களில் படங்கள் வந்து கொண்டிருக்கும் போட்டியான இந்த நிலையில் மெல்லிசை என்ற மென்மையான கதையை எந்த நம்பிக்கையில் இயக்குனர் கையில் எடுத்தார் என்பது புரியவில்லை. அன்பை பரப்புவதற்காக படம் எடுத்ததாக இயக்குனர் குறிப்பிடுகிறார். அந்த அன்பு ரசிகர்களிடம் ஒர்க்கவுட் ஆகுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மனதில் நிற்கின்றன.
மிடில் கிளாஸ் கதையை கவனமாக கையாண்ட இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள்.
இந்த மெல்லிசை அனைவரும் பார்க்க வேண்டிய படம்.








