சென்னைக்குப் புதிதாக வருகிறார் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது பேருந்தில் சுபாஷ் செல்வமைச் சந்திக்கிறார். இருவரும் நட்பாகிறார்கள். சென்னைக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதல் வழக்கே, மர்மமான முறையில் காணாமல் போன அவருடைய நீண்ட காலத் தோழியான அனன்யாவைத் தேடுவதுதான். அவரைத் தேடும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் என்ன, அனன்யா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா, என்பதுதான் ‘திட்டம் இரண்டு’ படத்தின் திரைக்கதை.
போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திருச்சியில் இருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இதற்காக ஊரில் இருந்து வரும் போது, நாயகன் சுபாஷ் செல்வத்தை பஸ்சில் சந்திக்கிறார். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையில் பணிக்கு சேர்ந்த சமயம், அவரின் நெருங்கிய தோழி காணாமல் போகிறார்.
இதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, தோழி விபத்தில் இறந்ததாக தகவல் கிடைக்கிறது. ஆனால் இது கொலை என்று நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலையாளியை தேட ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டுபிடித்தாரா? அவரின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருடைய நடிப்பு மற்றும் மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராஜ சுபாஷ் செல்வம். அவருடைய நடிப்பு சில இடங்களில் சரியாக எடுபடவில்லை. ஆனாலும், ஒரு நம்பிக்கைக்குரிய அறிமுகம்தான்.
இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அனன்யா. மொத்தப் படத்தில் இவருடைய நடிப்பு மட்டும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதால் இவர் மட்டும் தனியாகத் தெரிகிறார். இப்படித்தான் இந்தக் கதாபாத்திரம் என்றாலும், இப்படி மட்டுமேதான் நடிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. பாவல் நவகீதன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்கள் கதையை நகர்த்த உதவியுள்ளன.
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், வித்தியாசமான கதையை அழகாக சொல்லி இருக்கிறார். படம் முழுவதும் யூகிக்க வாய்ப்பு கொடுத்து, நழுவியது அபாரம். பிளாஷ்பேக் கதைக்கான மெனக்கெடலும், அதை சர்ச்சைக்கு இடமின்றி சொன்ன விதமும் அற்புதம். முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் கொடுத்து, அழுத்தமான கருத்தை சொல்லி இருக்கிறார். மெதுவாக செல்லும் திரைக்கதை, லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை.
கோகுல் பெனாயின் ஒளிப்பதிவும், சதிஷ் ரகுநாதனின் இசையும் எளிமையாக இருந்தாலும், கதாப்பாத்திரங்களைப் போல், காட்சிகளுடனே பயணித்துள்ளது