முதல்முறையாக வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை சித்ரா வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சரவணன் மீனாட்சி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சித்ரா.


தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களையும் பெற்றார்.


இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி சித்ராவுக்கும் ஹேமந்த் என்ற தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம் நடைபெற்ற போது தனது புகைப்படத்தை மட்டுமே வெளியிட்ட நடிகை சித்ரா, முதல்முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். சித்ராவின் இந்தப் பதிவுக்கு நடிகை சுஜிதா, ஹேமா, நக்ஷத்திரா உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
நடிகை சித்ரா தனது பதிவில் கூறியுள்ளதாவது, “நான் யார் என்பதன் அர்த்தம் நீங்கள் தான். நமக்குள் சவால்கள், தடுமாற்றங்கள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாம் இன்னும் ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் நேசிக்கும் வரை, வேறு எதுவும் முக்கியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.











