ஜோரா கைய தட்டுங்க – விமர்சனம்
பிரபல காமெடிகள் யோகி பாபு நடித்து மிகுந்த எதிர்பார்ப்போடு வந்திருக்கும் படம் ஜோரா கை தட்டுங்க.
பிரபலமான மேஜிக் கலைஞரின் மகன் யோகி பாபு. அப்பா இறந்த பிறகு யோகி பாபு மேஜிக் கலைஞராகிவிடுகிறார்.அவரால் அந்த தொழில் பிரகாசிக்க முடியவில்லை. மக்கள் அவரின் மேஜிக் பிடிக்காமல் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் யோகி பாபுவின் மேஜிக்கால் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது. இதையடுத்து யோகி பாபுவை போலீசார் அழைத்துச் சென்று அடிக்கிறார்கள். அதன் பிறகு ரவுடி கும்பல் ஒன்று யோகி பாபுவின் கையை வெட்ட அவரால் மேஜிக் செய்ய முடியாமல் போகிறது.
இதற்கிடையே காதல் டிராக் இருக்க வேண்டுமே என்பதற்காக வைக்கப்பட்டது போன்று இருக்கிறது. யோகி பாபு படத்தில் காமெடிக்கு பஞ்சமாக இருக்கிறது. மது அம்பாட்டின் ஒளிப்பதிவு தான் படத்தின் பெரிய பலமே.
யோகி பாபுவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் பழிவாங்கும் படம் பரபரப்பில்லாமல் மெதுவாக செல்கிறது. ஹீரோயின் சாந்தி ராவ் பெயருக்கு வந்து போகிறார்.
படத்தின் கதை எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று தெரியாமல் இயக்குனர் சற்று குழம்பி இருப்பது நன்றாகவே தெரிகிறது.
இதைப் பார்க்கும் பொழுது தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற நல்ல படத்தை எடுத்த இயக்குனரா இவர் என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் மாயை யோகி பாபு நடித்த படம் நன்றாக இருக்கும் படம் ஓடிவிடும் என்ற மாய மந்திரத்தை இப்படம் புக் நூறாக உடைப்பது நிச்சயம்.









