யாருடைய சப்போட்டும் இல்லாமல் தனி மனிதனாக சிறு சிறு கதாபாத்திரங்களில் படம் மாமன்.
படத்தில் சூரியின் அக்கா தான் சுவாசிகா. இவருக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் கடந்துமே கர்ப்பமாகவில்லை. இதனால் ஊரில் உள்ள அனைவருமே சூரியின் அக்காவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் முதல் முறையாக சுவாசிகா கர்ப்பம் ஆகிறார். இதனால் சூரி தன் அக்காவை பார்த்து பார்த்து கவனித்துக் கொள்கிறார். அதன் பின் ஆண் குழந்தையும் பிறக்கிறது.
சூரி தன்னுடைய மருமகனுக்கு கொடுக்கிறார். காலையில் எழுந்து அவனை குளிப்பாட்டி பள்ளிக்கு அனுப்புவது, அவனை தூங்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது என பெற்றோர்கள் செய்ய வேண்டிய அனைத்து வேலையுமே சூரி செய்கிறார். இதனால் அவன் ஒரு நிமிடம் கூட தன்னுடைய தாய் மாமனை விட்டு பிரியாமல் இருக்கிறான்.

மீண்டும் அந்த உறவுகள் இணைந்ததா? சூரி- ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தில் கதாநாயகன் சூரி ரொம்ப யதார்த்தமாக தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார். அக்காவுக்கு தம்பி ஆகவும், மருமகனுக்கு மாமனாகவும், மனைவிக்கு நல்ல கணவனாகவும் ஒவ்வொரு காட்சியிலும் சூரி சிறப்பாக நடித்தி இருக்கிறார். குறிப்பாக, பாசப் போராட்டத்தில் தவிக்கும் ஒரு ஆண் எப்படி எல்லாம் இருப்பான் என்பதையும் தன்னுடைய நடிப்பின் மூலம் சூரி காண்பித்திருக்கிறார்.
இயக்குனர் பாச போராட்டத்தை மையமாகக் கொண்டு கதைக்களத்தை எடுத்திருப்பது சிறப்பு. ஆனால், படம் முழுக்க முழுக்க எமோஷனலாக இருப்பதால் கொஞ்சம் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு இன்னும் கொஞ்சம் தெளிவாக கதையை சொல்லி இருக்கலாம். எமோஷனல் காட்சிகள் படத்திற்கு பலமாக இருந்தாலும் சில நேரத்தில் அது பலவீனமாகவே இருக்கிறது. கொஞ்சம் காமெடியும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக 2k கிட்ஸ்க்கு இவ்வளவு எமோஷனல் தேவையா? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறது.
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவும் இல்லை. இயக்குனர் எடுத்துக்கொண்ட கதைகளத்தை கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார். அதோடு கதாபாத்திரங்களையும் சிறப்பாக தேர்வு செய்து இருக்கிறார். ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. எடிட்டிங் நன்றாக இருக்கிறது.









