• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பாம் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
September 13, 2025
in விமர்சனம்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பாம் – விமர்சனம் 

விஷால் வெங்கட் இயக்கத்தில் ‘குரல் நாயகன்’ அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பாம்.

கெம்ரியோ பிக்ச்சர் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். ஒரு கிராமம் சாதியின் அடிப்படையில் இரண்டாக பிரிந்து கிடக்கிறது. தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு அதிகாரிகள் சமரசம் செய்ய முயற்சி செய்தும் பயன் இல்லை. இவர்களின் மோதலை பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் நாசர். இந்த கிராமத்தில் உள்ள முக்கிய நபராக இருக்கும் காளி வெங்கட் இந்த மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார். இவரது நண்பர் அர்ஜுன் தாஸ். எதிர்பாராத விதமாக காளி வெங்கட் இறந்து விடுகிறார். இவரது உடலில் சில மாற்றங்கள் தென்படுவதை பார்க்கும் அர்ஜுன் தாஸ் “நண்பன் இறக்க வில்லை” என்கிறார்.

ஆனால் ஊர் ஏற்று கொள்ளாமல் பிணத்தை எரிக்க சொல்கிறது. இந்த சூழ்நிலையில் ஊரில் சிலருக்கு நல்லது நடக்க, இதற்கு காரணம் இறந்த நபர் தான் என்றென்னி ஊருக்கு நடுவே பிணத்தை வைத்து சாமியாக கும்பிடுகிறார்கள். இப்படி செய்தால் பல நாட்கள் காட்சி தராமல் இருந்த ‘ஜோதி’ தெய்வம் காட்சி தரும் என்று எண்ணுகிறார்கள். இறந்த ஒருவரின் பிணத்தை அடக்கம் செய்யாமல் வைத்திருக்க கூடாது என அரசு எச்சரிக்கை விடுகிறது. பிணத்தை புதைத்தார்களா? இல்லையா? ஜோதி தரிசனம் கிடைத்ததா? என்பது தான் கிளைமாக்ஸ்.
ஜாதி மோதல்கள், தீண்டாமை, நாட்டார் வழக்கியல் என்ற மூன்றையும் ஒரே படத்தில் சொல்லி இருக்கிறார் டைரக்டர். இதை ஒரு பிரசாராமாக இல்லாமல், நல்ல திரைக்கதையில் கிராமிய பின்னணியில் தந்திருக்கிறார். டைரக்டருடன் சேர்ந்து இப்படத்திற்காக மணிகண்டன், அபிஷேக் சபரிஷ்வரன் என்ற இருவரும் திரைக்கதையில் பணியாற்றி உள்ளார்கள். முதல் பதினைந்து நிமிடத்தில் இந்த படத்தின் கதை இதுதான், இது பிரச்சனை என்று சொல்லி விட வேண்டும் என்ற ஹாலிவுட் பாணியில், படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு பாட்டி பேரனுக்கு சொல்லும் கதை போல் படத்தின் பிரச்சனையை சொல்லி விடுகிறார்கள்.

படத்தின் முதல் பாதி நார்மலாகவும், இரண்டாம் பாதி மிக சிறப்பாகவும் இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் மிக அருமையாக இருக்கிறது. தன்னால் தான் தனது நண்பனுக்கு தண்டனை கிடைத்தது என்று வருந்தும் சிறுவன், சிறுவர்கள் கையில் கட்டி இருக்கும் ஜாதி கயிரை தூக்கி எரியும் காட்சி என பல காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

காளி வெங்கட் பிணமாக நடிக்கும் காட்சியில் கூட உயிரோட்டமாக நடித்திருக்கிறார். முதல் முறையாக ஆக்ஷனில் இருந்து கொஞ்சம் மாறி ஒரு அப்பாவியாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். தனது ‘சிங்க குரலில் கர்ஜிக்காமல்’ அமைதியாக நடித்துள்ளார்.

ஷிவாத்மிகா இதுவரை தமிழில் நடித்துள்ள படங்களில் நடிப்பு திறமையை இந்த படம்தான் முழுமையாக வெளிக்கொண்டு வந்துள்ளது. இயக்குநர் சரியாக பயன்படுத்தி உள்ளார். இமானின் பின்னணி இசையில் ஒரு லைவ் கிராமத்தை பார்த்த உணர்வு கிடைக்கிறது. ‘நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள், நாம் வழிபடும் நாட்டார் தெய்வங்களும் ஒன்று தான். இங்கே ஜாதிக்கு என்ன வேலை’ என்று கேட்கிறது பாம். சாதி ஆணவ படுகொலைகளும், தீண்டாமை பிரச்சனைகளும் இருக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற பாம் தேவைதான்.

மொத்தத்தில் இந்த பாம் – ஜாதிக்கு வைக்கும் வெடி.
Previous Post

காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.

Next Post

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

Next Post

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

Popular News

  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் #DQ41 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.