கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்
‘சிங்கம் 2’ மற்றும் ‘சர்தார்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ (Prince Pictures) நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன் அறிவித்துள்ளது.
குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் தொடங்குகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், அனைவராலும் விரும்பப்படும் கார்த்தியின் பரிமாணத்தை இந்தப் படம் மீண்டும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’ மற்றும் ‘தனி ஒருவன்’ போன்ற படங்களுக்காக புகழ்பெற்ற இயக்குநர் மோகன் ராஜா, இந்த அறிவிப்பின் மூலம் திரையுலகில் தனது 25-ஆவது ஆண்டை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவரது இந்த அறிவிப்பு, அவரது பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மேலும், கார்த்தியுடன் அவர் இணையும் செய்தி வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்தில் நட்சத்திர பட்டாளமும், வலுவான தொழில்நுட்ப குழுவும் இடம்பெறவுள்ளன; இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.








