• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்; ஷெரிஃப் தயாரிப்பாளரின் இயக்குனராக இருக்கிறார்! – இயக்குனர் பாலாஜி சக்திவேல்

by Tamil2daynews
August 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்; ஷெரிஃப் தயாரிப்பாளரின் இயக்குனராக இருக்கிறார்! – இயக்குனர் பாலாஜி சக்திவேல்

 

ஜெய் கிரண் தயாரிக்க, இயக்குனர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது :

தயாரிப்பாளர் ஜெய் கிரண் பேசும் போது,
அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அப்பா ஸ்தபதி. 50 வருடங்களாக கோவில் கட்டும் பணியில் இருக்கிறார். அவருடைய 13 வயதிலிருந்து இந்த பணியை செய்து கொண்டிருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

நான் அவருடன் இணைந்து பல வேலைகள் செய்து இருக்கிறேன். இப்போது இப்படத்தை தயாரித்திருக்கிறேன். பலர் என்னிடம், ஆம்புலன்ஸ்-ஐத் தொடர்ந்து காந்தி கண்ணாடி என்று கேட்கிறார்கள். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த இரண்டு படங்களுமே வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படங்கள். பாலாவை பொறுத்தவரை கேப் டிரைவராக இருந்தாலும் சரி, சிறிய கடை வைத்திருந்தாலும் சரி அவர் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டு தான் இருப்பார் என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம் அன்பு தான் எல்லாமே அன்பில்லாமல் யாரும் இந்த உலகத்தில் வாழ முடியாது இப்படிப்பட்ட அற்புதமான ஒரு கருத்தை மையப்படுத்தி இந்த படம் வந்திருக்கிறது.

பொதுவாக நான் ஒரு படத்தைப் பற்றி பேசும் போது அது படம் அல்ல, சிற்பம் என்று தான் கூறுவேன். ஒரு சிற்பத்தில் கண்கள், மூக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்றால் அது சிற்பம் அல்ல கல் தான் என்று கூறுவேன். அப்படி ஸ்தபதியாக இருந்து பல கோவில் கட்டியவர் இன்று தயாரிப்பாளராகி இருக்கிறார் என்றால், நிச்சயம் இப்படம் நல்ல சிற்பமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த படம் நிச்சயம் வெற்றி அடையும் என்றார்.
இசையமைப்பாளர் விவேக் பேசும்போது,
இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி அவர் கதை கூறும் போது மாடல் மாடர்ன் ஆன காதல் அன்பு அதைப் பற்றி கூறும் ஒரு படம். நிச்சயம் அனைவரும் இப்படத்தை அனைவரும் என்ஜாய் பண்ணுவார்கள் என்று நம்புகிறேன். புல்லட் வண்டி என்று தொடங்கும் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ளது அந்தோணி தாஸ் அப்பாடலை பாடியிருக்கிறார். மேலும் 3 பாடல்கள் இன்னும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இவன் சங்கர் ராஜா சார் மற்றும் தேவா சார் ஆகியோரும் இப்படத்தில் வரும் பாடல்களை பாடி இருக்கிறார்கள் என்றார்.

இசையமைப்பாளர் மெர்வின் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம் பாலாஜி சக்திவேல் சாரின் காதல் திரைப்படம் திரைப்படத்தால் பாதிப்படைந்த பலரில் நாங்கள் இருவரும் உண்டு. அவர் நடிக்கும் இப்படத்தில் எங்களுடைய பங்களிப்பும் இருப்பதில் என்பதில் மிகவும் மகிழ்ச்சி என்றார்.

நடிகர் மதன் பேசும்போது,
இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி . இப்படத்தில் நான் பாலா அண்ணனின் கவுண்டரை எடுத்து பயன்படுத்தி இருக்கிறேன் பாலா அண்ணன் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார் நிறைய கற்றுக் கொடுத்தார் அவர் மட்டுமல்ல இப்பாடக் குழுவினர் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகை ஆராத்யா பேசும் போது
எல்லோருக்கும் வணக்கம் நீங்கள் அனைவரும் மதிமாறன் குற்றம் தவிர் அனைத்தையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் காந்தி கண்ணாடி விழா மேடை எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த படத்தில் எனக்கு உணர்வுபூர்வமான கதாபாத்திரம் என்னை நானே திரையில் பார்க்கும்போது கண்ணை எடுக்கத் தோன்றவே இல்லை. பார்க்கும் அனைவரின் இதயத்திலும் நான் ஒட்டிக் கொண்டது போல ஒரு உணர்வு. அதிலும் சக்திவேல் சார் மற்றும் அர்ச்சனா மேடம் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு ஷெரிஃப் சாருக்கு மிகவும் நன்றி.

தயாரிப்பாளருக்கும் நன்றி. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியில் நானும் ஒரு சிறிய பங்காக இருப்பதற்கு நன்றி. எனக்கு சினிமா தான் எல்லாமே. சினிமா என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி கொண்டு வருகிறது. நான் இன்னும் நிறைய கற்றுக் கொண்டு மேலும் வளர உங்களுடன் எல்லாருடைய ஆசீர்வாதமும் எனக்கு தேவை. பாலா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நான் ஒரு சிறிய உறுப்பாக இருப்பதற்கு மகிழ்ச்சி என்றார்.

நடிகர் அமுதவாணன் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் பாலாவும் கதாநாயகியும் காதலராக நடிப்பது போல தோன்றவில்லை, இயல்பாக இருக்கிறது. எனக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் வைத்தது பாலா தான். பாலா கதாநாயகனாக வருவான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவனுடைய குணமும் செயல்களும் தான் பிரபஞ்சம் இந்த இடத்திற்கு கொண்டு வந்து கொண்டு வந்திருக்கிறது. மேலும், இன்னொரு முக்கிய காரணம் ஊடக நண்பர்கள் தான். ஏனென்றால், அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பாலாவின் செயலை நேரிலும் சரி, பத்திரிகையிலும் சரி அவர்களுடைய பாராட்டுதல் தான் இந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றார்.
நடிகர் மனோஜ் பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம். இவ்வளோ பெரிய லெஜென்ஸ் எல்லோரும் நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த வாய்ப்பு கொடுத்து செரிப் அண்ணாவிற்கு நன்றி எல்லாருடைய ஆதரவும் எனக்கு வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி பேசும் போது,
அனைவருக்கும் வணக்கம் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இயக்குனர் ஷெரிஃப், இந்த படத்திற்காக கதாநாயகி தீர்வுக்காக நாங்கள் 50 கதாநாயகி அழைத்தோம். 51 வது நபராக உங்களை இந்த படத்திற்காக நாயகியாக தேர்வு செய்து இருக்கிறோம் என்று கூறினார். அந்த 50 பேரும் 50 ஆசீர்வாதமாக நான் நினைக்கிறேன். அது தவிர இங்கும் நிறைய ஆசிர்வாதங்கள் இருக்கிறது பாலாஜி சக்திவேல் சாரும் அர்ச்சனா மேடம் சொல்லிக் கொடுத்த பல விஷயங்கள் தான் இந்த படத்தில் நான் செய்திருக்கிறேன் ஆகையால் அவங்களுடைய ஆசிர்வாதமும் எனக்கு இருக்கிறது.

எல்லாருடைய இதயத்திற்கும் பிடிக்கும் விதமாக இப்படத்தை ஷெரிஃப் சார் எடுத்து இருக்கிறார். பாலாவுடன் நடித்ததில் அவர் மனிதநேயமிக்க மனிதன் என்பது தெரிந்தது அவருடன் நான் திரையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் சார் அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை அர்ச்சனா பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம். காந்தி கண்ணாடி மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. திடீரென்று ஒருவர் உயரத்திற்கு வந்தால் அதற்கு மதிப்பும் இருக்காது பாலா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் அதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். காமன் மேனாக இருந்த பாலாவை முதல் படத்திலேயே கம்ப்ளீட் மேனாக இயக்குனர் ஷெரிஃப் மாற்றி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

படம் தொடங்கியதும் முதல் 10 நிமிடத்தில் பாலா சாதாரண மனிதனாக இருப்பார். அடுத்த பத்து நிமிடத்தில் அதற்கு மேலே இருப்பார் படம் முடியும் போது முழுமையான கதாநாயகனாக மாறி இருப்பார்.

நமீதா ஒவ்வொரு காட்சியையும் புரிந்து கொண்டு அழகாக நடித்தார். வயதுக்கு மீறிய பக்குவம் இருக்கும்போது அந்த செயல் எப்போதுமே சிறப்பாக இருக்கும், அதை நமிதாவிடம் பார்க்கலாம். ஆராதயா மற்றும் மனோஜ் பற்றி நான் பேசப்போவதில்லை. ஏனென்றால், படம் வந்த பிறகு நீங்கள் எல்லோரும் பேசுவீர்கள். அமுதவாணன் மற்றும் மதன் ஆகியோரும் சிறப்பாக தங்கள் பணியை செய்து இருக்கிறார்கள்.

ஷெரிஃப்க்கு என்ன தேவையோ அதை உணர்ந்து அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பாலாஜி. கண் கூட்டாமல் பார்க்கும் அளவிற்கு மிகவும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் பாலாஜி.

ஷெரிஃப் சிறு வயதிலேயே மயிலாட்டம் ஒயிலாட்டம் போன்றவற்றை கற்று வைத்திருக்கிறார் இப்போது நிறைய பேருக்கு நிறைய விஷயங்களை இலவசமாக கற்றுக் கொடுக்கிறார் அவர் நன்றாக நடனம் ஆடுவார் இந்த படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கிறார்.

லவ்வர் பாய் பாலாஜி சக்திவேலை பற்றி மக்களே பேசட்டும் என்றார்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேசும்போது
அனைவருக்கும் வணக்கம். எனக்கு மேடைப்பேச்சு அவ்வளவாக வராது. ஆனால், நான் நிறைய பேச வேண்டும். முக்கியமாக இந்த படத்தைப் பற்றியும் இந்த குழுவினர்கள் பற்றியும் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பாலாவிற்கு சுயம்பு என்று சொல்கிற மாதிரி இயல்பாகவே உதவும் குணம் இருக்கிறது. அதேபோல், இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். எல்லோரும் செல்வதைப் போல இல்ல வாய்ப்புகளும் இந்த கதாபாத்திரத்தில் இருக்கிறது. பாலா உதவி செய்கிறவர் என்ற பெயர் மட்டும் இல்லாமல் சிறந்த நடிகர் என்ற பெயர் இந்த படத்தின் மூலமாக அவருக்கு நிச்சயம் கிடைக்கும்.

ஷெரிப் இந்த படத்தை அருமையாக இயக்கியிருக்கிறார் முக்கியமாக மழை வந்தாலும் படபிடிப்பு நிறுத்தாமல் எடுத்து விடுவார். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குனராக ஷெரிஃப்பை நான் பார்த்தேன்.

எனக்கு பெரிய போஸ்டர் வைத்திருக்கிறார்கள், பார்க்கவே கூச்சமாக இருக்கிறது.

இந்த படத்தை பத்திரிக்கையாளராக நீங்கள் எல்லோரும் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குனர் ஷெரிஃப் பேசும்போது,
நான் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவன். சிறுவயதில் வறுமையின் காரணமாக குழந்தை தொழிலாளியாக இருந்திருக்கிறேன். நிறைய கலைகளை கற்றுக்கொண்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி இருக்கிறேன். அதிகமாக கோவிலுக்கு பறை வாசிக்க செல்வேன். நாங்கள் எப்போதும் குழுவுடன் சேர்ந்து தான் செய்வோம். ரூ.2,000/-, ரூ.3,000/-இப்படித்தான் வருமானம் வரும். அந்த பணத்தை வைத்து தான் படிப்பு, மற்ற விஷயங்களை கற்றுக் கொள்வேன்.

எனக்கு எப்போதும் பிரபஞ்சத்தின் மீது மிகவும் நம்பிக்கை உண்டு. நான் பல கோயில்களில் பறை வாசித்திருக்கிறேன். 200 கோயில்களை கட்டிய ஸ்தபதி இந்த படத்தின் தயாரிப்பாளராக வந்துள்ளதே அதற்கு சாட்சி. இந்த படத்தின் முதல் பாதியை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் இந்த படத்தை நான் கண்டிப்பாக எடுக்கிறோம் என்று கூறினார். உடனே டெல்லியில் இருந்த பாலாவை தொடர்பு கொண்டு இந்த படத்தை பற்றி பேசினேன். வெறும் 5 மணி நேரங்களிலேயே இந்த கதை படமாவது உறுதியாக விட்டது.

சுமார் 16 வருடங்களுக்கு முன்பு அப்பு அண்ணா மற்றும் அவருடைய அண்ணா இருவரும் பத்திரிக்கை ஒன்றை தொடங்கினார்கள். அதற்கான விளம்பரத்திற்காக ரூ. 400/- க்கு நான் வரை வாசிக்க சென்றேன். இப்போது என்னுடைய படத்திலேயே அண்ணா கலையை கிணறாக பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

உதய் அண்ணா தான் என்னுடைய சக்தியை. அவர் எல்லா வேலைகளையும் பார்ப்பார். மதன் என்னுடைய நண்பன் அவன் அங்கீகரிக்கப்பட வேண்டிய கலைஞன் அவனுக்காக இந்த படத்தில் நான் ஒன்று செய்திருக்கிறேன்.

நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன் ஏனென்றால், நான் சிறு வயதில் சந்தித்த நபர்களுடைய கதை.

பாலாவை பற்றி பலரும் நிறைய பேசியிருக்கிறார்கள். யாரும் பேசாத, யாருக்கும் தெரியாத சில விஷயங்களை நான் இங்கு சொல்கிறேன். பாலா உதவி செய்யும் போது மற்றவர்கள் கொடுக்கிறார்கள், பாலா உதவி செய்கிறான் என்று சொல்வார்கள். ஆனால், அப்படி அல்ல. பாலாவிற்கு வரும் வருமானத்திலிருந்து 90% உதவி செய்கிறான். அவனுக்கென்று எதுவும் செய்து கொள்வதில்லை. அவனுக்கென்று தனியாக வீடு கூட இல்லை. அண்ணனுடன் தான் தங்கி இருக்கிறான். இப்பொழுது தான் சிறிய கார், அதிலும் செகண்ட் ஹேண்ட் கார் தான் வாங்கி இருக்கிறேன். பாலா, உனக்கென்று சில விஷயங்களை நீ செய்து கொள்ள வேண்டும்.

மேலும் முதன்முதலாக ஒரு குழந்தைக்கு உதவ தான் பாலாவிற்கு நான் போன் செய்தேன் அப்படித்தான் பாலா எனக்கு அறிமுகம் அதன் பிறகு இந்த கதையை நான் கூறினேன் என்னை வைத்து எல்லாம் படம் எடுப்பீர்களா என்று கேட்டான். நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னேன். அதன்படி இன்று எடுத்து விட்டேன். பாலாவின் முதல் படத்தை இயக்கியவர் ஷெரிஃப் என்று சொல்லும் படியாக அவன் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறான், அதற்கு அவனுக்கு நன்றி. அதற்கு பதிலாக நானும் அவனுக்கு ஒரு நல்ல படம் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த படத்திற்காக அவன் கடுமையாக உழைத்திருக்கிறான். பாலாவை தேர்வு செய்தவுடன் என்னிடம் பலரும் இவன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறான் கேமராவிற்கு பொருந்துவானா என்று நேரடியாகவே கேட்டார்கள். அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு 25 கிலோ எடை கூடியிருக்கிறான்.

50 நாயகிகள் இந்த படத்தை தவிர்த்து இருக்கிறார்கள். 51வதாக நமீதா இந்த கதையை புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். 50 பேரும் இந்த படத்தை ஒதுக்கியதற்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம் அது பற்றி நாம் விமர்சிக்க வேண்டாம்.

அர்ச்சனா அம்மா நடிப்பிற்கென்றே பிறந்தவர். அவரை இயக்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

பாலாஜி சக்திவேல் அண்ணாவின் வழக்கு எண் படத்தை அகஸ்தியா திரையரங்கில் பார்த்தேன். எப்புட்றா!! என்பது போல இருந்தது. அந்தப் படத்தைப் பற்றி நிறைய பாராட்டி பத்திரிகைகளில் எழுதினார்கள். அந்த படங்களை பார்த்து தான் வளர்ந்தோம்.

தேசிய விருது பெற்ற இருவரை இயக்கியிருக்கிறேன், இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு?

தீரன் அதிகாரம் ஒன்று நந்தீஸ்வரன் என்று பெயர் எடுத்தது போல காந்தி கண்ணாடி என்றும் இவருக்கு நிச்சயம் பெயர் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு படத்தின் வேலைகள் இருப்பதால் இன்று அவரால் வர இயலவில்லை.

இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் இருவரின் பின்னணி இசையைப் பற்றி படம் வந்த பிறகு அனைவரும் பேசுவார்கள்.

இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினரும் என்னுடைய கனவை அவர்களுடைய கனவாக நினைத்து இரவும் பகலும் பாராமல் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

என்னுடைய முதல் படத்தை போலவே இந்த படத்தையும் வெற்றிபடமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் பாலா பேசும்போது,
அனைவருக்கும் வணக்கம், நான் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறேன். இன்று இங்கு வரும்போது போஸ்டரை பார்த்ததும் எனக்கு அடிவயிற்றில் அயன் பாக்ஸ் வைத்து தேய்த்தது போல இருந்தது. நான் நடித்த படத்தின் போஸ்டர் என்று வியப்பாக இருந்தது. இன்று நான் இங்கு நிற்கிறேன் என்றால் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான் காரணம் என்று நம்புகிறேன்.

எனக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி இருக்கிறது என்றால் வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு வேர்ல்ட் கப் கொடுத்தது போல இருக்கிறது.

கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று எனக்கு நடந்திருக்கிறது போல் தோன்றுகிறது. காரைக்காலில் பிறந்த நான் ஒருவரின் உறுதுணையால் இங்கு நிற்கிறேன். காரைக்கால் பாலாவாக இருந்த நான் காந்தி கண்ணாடி பாலாவாக மாறியதற்கு காரணம் அமுதவாணன் அண்ணன்தான்.

நான் எதற்கு முன்பு சிறு சிறு கதாபாத்திரங்களை சுமார் 19 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனா 11 படங்களில் நான் வரவில்லை பட தொகுப்பில் என்னுடைய காட்சி தேவை இல்லை என்று நீக்கி விட்டதாக கூறுவார்கள் அதனால், அவர்களை நான் குறை சொல்லவில்லை.

ஷெரிஃப்-ம் நானும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அப்போதே எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கள். ஐந்து அல்லது ஆறு காட்சிகள் கதாநாயகனுடன் நண்பனாக காதலி சேர்த்து வைக்கும் படியான இப்படி ஏதாவது வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டேன். அவரும் சரி என்று கூறினார்.

அதன் பிறகு ஒரு நிகழ்ச்சியின் போது ராகவா லாரன்ஸ் நீ என்ன ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார். நான் கதாநாயகன் என்று கூறினேன். அதற்கு அவர் வாழ்த்தினார். மேலும், நான் ஏன் உன்னை கதாநாயகனாக வேண்டும் என்று கூறுகிறேன் என்றால், நீ கதாநாயகனாக வளர்ந்தால் இன்னும் பலருக்கு உன்னால் உதவி செய்ய முடியும் என்று கூறினார். அந்த வார்த்தையை நான் பிடித்துக் கொண்டு கதாநாயகன் ஆவதற்கான எல்லாம் முயற்சிகளையும் செய்தேன்.

அதுமட்டுமல்லாமல் மேடையிலேயே எல்லோரை பார்த்தும் இவனுக்கு யாராவது கதாநாயகன் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் ஷெரிஃபை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நிகழ்ச்சிகள் தான் என்று கூறினேன். படம் நடிக்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். தயாரிப்பாளர் உன்னை வைத்து படம் எடுக்க சம்மதித்து விட்டார். நீ தான் கதாநாயகன் என்று கூறினார்.

அதேபோல் என்னை கதாநாயகனாக ஆக்குவதில் விருப்பம் தெரிவித்த முதல் தயாரிப்பாளர் ஜெய் கிரண் சார் தான். நம்முடைய குடும்பத்தாரும் உறவினர்களும் 5 லட்சங்கள் நம்மை நம்பி கொடுத்தாலே பெரிய விஷயம். ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிலர் உதவுவார்கள், இல்லையா! அப்படித்தான் பல கோடிகளை என்னை நம்பி செலவழித்திருக்கிறார். அவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

பாலாஜி சக்திவேல் சாரிடம் கதை கூறிய போது நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். நான் கதாநாயகன் என்றது மறுத்துவிடுவார் என்று தயங்கினேன். ஆனால், இந்த சாதாரண ஒரு ஆளுக்காக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி.

அதேபோல் தான் அர்ச்சனா அம்மாவும் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அடுத்ததாக, கதாநாயகி தேர்வு நடைபெற்றது. அப்போது எல்லோரும் கதை கேட்பார்கள். நன்றாக இருக்கிறது என்பார்கள். கதாநாயகன் நான்தான் என்றதும் யோசித்து சொல்கிறேன் என்று சென்று விடுவார்கள். இப்படி 50 பேருக்கு பிறகு நமீதா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் என்னுடன் நாயகியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார், அவருக்கு மிக்க நன்றி.

மேலும், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Previous Post

குற்றம் புதிது – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!

Next Post

ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!

Popular News

  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0
  • CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.