டி சி (DC) – விமர்சனம்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் படம் டி சி.
தலைவாசல் விஜய்யின் தலைமையிலான கூலிப்படையில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் (தேவதாஸ்), தனது நண்பர்களுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். போலீசாரை தாக்கி அவர்களின் ஆயுதங்களை கடத்துகிறார், இது மிகப்பெரிய விஷயமாக மாறுகிறது. இந்த சமயத்தில் போலீஸ் ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது.
அந்த குடும்பத்திற்காக போலீஸை கொடூரமாக கொலை செய்கிறார் லோகேஷ் கனகராஜ். போலீஸ் இவர்களை தீர்த்துக்கட்ட தேடுகிறது. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது நண்பர்களுடன் ஒரு லாட்ஜில் தலைமறைவாகிறார்கள். அங்கு சஞ்சனாவை (பார்வதி) சந்திக்கிறார் லோகேஷ்.

இதன்பின், விலை மாதுவாக இருக்கும் வாமிகா (சந்திரா) கேபியை சந்திக்கிறார். தனக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருக்கும் வாமிகா அங்கிருந்து லோகேஷ் உதவியுடன் தப்பிக்கிறார். வெவ்வேறு பாதையில் பயணித்த இவர்கள் இருவரும், உயிருக்கு பயந்து ஓடுவதும், தங்களுக்கு வந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதும்தான் படத்தின் மீதி கதை.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, அனிருத் அனிருத் அனிருத் மட்டும்தான். மொத்த திரைப்படத்தையும் தனது பின்னணி இசையில் சுமந்து சென்று பட்டையை கிளப்பியுள்ளார். இடைவேளை, கிளைமாக்ஸ் என குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு இல்லாமல், முதல் காட்சியில் தொடர்ந்து கிளைமாக்ஸ் கிரெடிட்ஸ் வரை அனிருத்தின் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது. இப்படியொரு பின்னணி இசையில் மொத்த திரைப்படத்தையும் பார்க்கும் அனுபவம் என்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது.
இதுவரை இயக்குநராக தமிழ் சினிமாவில் பல பாராட்டுகளை பெற்ற லோகேஷ் கனகராஜ், தற்போது டிசி படத்தில் ஹீரோவாகவும் நன்றாக நடித்துள்ளார். தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதை திரையில் தனது நடிப்பால் தெளிவாக வழங்கியுள்ளார். முதல் படத்திலேயே ஹீரோவாக முத்திரை பதித்துள்ளார். இது லோகேஷுக்கு ஒரு புதிய திருப்பம்.
நடிகை சஞ்சனாவிற்கு குறுகிய காட்சிகள் என்றாலும், அவருடைய கதாபாத்திரத்தின் தாக்கம் இறுதி வரை உள்ளது. சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை வாமிகா கேபி, நம் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு பின் அவருடைய கதாபாத்திரத்தின் Transformation திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக மாற்றியது.

இப்படத்தை பொறுத்தவரை வன்முறை என்பது இருமுனை கத்தி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், வன்முறை தான் இப்படத்தின் பிளஸ், அதே சமயம் ஏன், எதற்காக இவ்வளவு வன்முறை என்று கேள்வி எழுகிறது. ஒளிப்பதிவு மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக ஒளிப்பதிவு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காட்டிய விதம் மிகவும் அழகாக இருந்தது.
மொத்தத்தில் படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவா அனிருத் ஹீரோவா என்கிற கேள்விக்குரியில் படத்தில் இருவரும் போட்டி போடுது பின்னி எடுத்திருக்கிறார்கள்.
அனிருத் இதில் முதலாவது ஜெயித்தாலும் லோகேஷ் கனகராஜ் தனது கம்பீரமான உடல் கட்டிலும் முகபாவனைகளும் ஜெயிக்கிறார்.









