“நான் முதலில் ஒரு நடிகர் புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற நான் விரும்புகிறேன்” என்கிறார்: பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்
பாகுபலி மற்றும் மஹிஸ்மதி உலகத்தில் இதுவரை கேட்காத, பார்க்காத மற்றும் அனுபவித்திராத பல நிகழ்வுகளும், கதைகளும் இருக்கின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா இணைந்து இந்தியாவில் எண்ணற்ற இரசிகர்களின் அபிமானம் பெற்று திரைப்பட பிரான்சைஸ்-ன் ஒன்றில் அனிமேட்டட் சீரிஸை சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் பாகுபலி: க்ரௌன் ஆஃப் பிளட் (இரத்தத்தின் மணிமகுடம்) என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கதையில் மஹிஸ்மதி நாட்டையும் மற்றும் அரியணையையும் அதன் மிகப்பெரிய எதிரியான ரக்ததேவா என்ற பெயர் கொண்ட பயங்கரமான அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பதற்கு பாகுபலியும், பல்லாலதேவாவும் கைகோர்க்கின்றனர்.
இது தொடர்பாக ஷரத் கல்கர் பேசுகையில், “டப்பிங் பணியை நான் சிறப்பாக செய்கிறேன். ஆனால், ஒரு நல்ல குரல் தேவைப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட வகையான கதாபாத்திரத்திற்கு மட்டுமே அதனை நான் செய்வேன் என்று அர்த்தமில்லை. முதலில் நான் ஒரு நடிகர். நான் சிறப்பாக நடிக்கக்கூடியவன். எனது குரலைப் பொறுத்தவரை எந்தவொரு பரிமாணத்திற்கும் அதனை என்னால் எடுத்துச்செல்ல முடியும். ஆனால், அதிஷ்டவசமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நபர்கள் என்னிடம் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஒரே மாதிரியான முத்திரை என் மீது குத்தப்படாமல் இருப்பதற்காக, வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும், பின்னணி குரல் கொடுக்கவும் நான் முயற்சி செய்கிறேன். நல்ல நேரங்கள் வருவதற்காக நான் காத்திருக்கிறேன். சிறப்பானது நிச்சயமாக வரும் என்று நான் நம்புகிறேன்.” என்று கூறினார்.









