தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து மீண்டும் திரையரங்குகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளன. சில படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அவை திரையரங்குகளில் பார்ப்பது போன்ற அனுபவத்தை தரவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளன. அதன்படி (22/08/2020) அன்று நடைப்பெற்ற மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே முக்கிய சந்திப் நடைபெற்றது. இதனையடுத்து நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்த்த அனைவருக்கும் சந்தோஷம்தான்
தியேட்டர் திறக்கப்படுவது குறித்து பேசிய தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என மத்திய அரசு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆலோசனையில் மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும்” என்றும் கூறினார். ஆக இவ சொல்வதை பார்த்தால் செம்டம்பர் மாதம் தியேட்டர்கள் திறப்பது உறுதி என்றே தெரிகிறது.









