


தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி மீதும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் மீதும், மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தம்பி காளிதாஸ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் மீதும் அவதூறு கருத்துக்களை, தனிமனித தாக்குதல் நிறைந்த பதிவுகளை, நாம் தமிழர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கெட்ட நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் அவதூற்றுப் பதிவுகள் பதிந்து வருகிற பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு சுகுணா சிங் அவர்களிடம் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.



இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில், மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சியின் மண்டலச் செயலாளர் திரு கலியபெருமாள், திருவாரூர் மாவட்ட செயலாளர் இக்பால்தீன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் காளிதாஸ் , கும்பகோணம் மாவட்ட தலைவர் ராஜ்குமார், குடந்தை தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சீர்காழி பகுதி வழக்கறிஞர் பாரதி மற்றும் சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.










