
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கைல சந்தோஷமா இருக்கிறவங்க எல்லோருமே இந்த படத்தை பார்த்தா கொஞ்சம் நமது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது உண்மைதாங்க.பொதுவாக நம்ம ஒரு நாட்டில் இருக்கோம்னா நம்ம இஷ்டப்படியே இல்ல நம்ம விருப்பத்துக்கு ஏற்ப எப்படி வேணாலும் வாழலாம் அதுதான் இயல்பு.இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும்
படம் தான் சினம் கொள்.
இலங்கைவாழ் தமிழர்களுடைய வாழ்வாதாரத்தையும் இயல்பு வாழ்க்கையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் நம் கண் முன்னே காண்பித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.இலங்கைத் தமிழர்கள் என்றால் நமக்கு எல்லாத்துக்குமே தெரிஞ்சது அங்கிருந்து இராமநாதபுரம் முகாமுக்கு வந்து தங்குவாங்க நம்ம நாடு வந்து அவிங்களுக்கு ஒரு முகவரி கொடுத்து ஒரு அடைக்கலம் கொடுப்பாங்க இதுதான் நம்ம எல்லாம் தெரியும்.அப்படி இலங்கையிலிருந்து வந்த ஒரு குடும்பமாய் எல்லோருமே வந்து தமிழகத்திற்கு வந்தது கிடையாது.பாதி பேர் இங்க இருப்பாங்க பாதிப்பேர் அங்க இருப்பாங்க.இங்கேயும் அங்கேயும் இருக்கக்கூடிய வாழ்க்கை நமக்கு தெரியுமா தெரியாது முதல் விஷயம் இதுதான் இதுல இன்னொரு விஷயம் இருக்கு .அங்கு இருக்கும் நம்முடைய வாழ்வாதாரம் எப்படி இருக்கு இலங்கை தமிழர்களுடைய மரியாதைகள் எப்படி இருக்கு இதுதான் இந்த படத்தில் தெள்ளத்தெளிவாக உண்மையை உடைத்து வெளி உலகத்துக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

இத்திரைப்படத்தில் நடித்த அனைத்து மண்ணுக்காக போராடும் இவ்வுலகில் அந்த ஆண் மகனின் மனதில் ஒரு பெண்ணுக்காக கடைசி வரை போராட வேண்டும் என்ற எண்ணம் இயக்குனரின் பஞ்ச்.கதாபாத்திரங்களுமே ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கின்றனர்.இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வாதாரம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த படம் பொங்கலன்று OTT யில் வெளியாகிறது.









