படம் அங்கிருந்து ப்ளாஸ்பேக்-ஆக செல்ல, டொவினி சென்றால் கவர்மெண்டில் உயர் அதிகாரி வேலை தான் என்று இருக்கிறார். அப்போது வேலையே இல்லாத காரணத்தை காட்டி காதலி உட்பட எல்லோரும் திட்ட, கிடைத்த கான்ஸிடபுள் வேலைக்கு செல்கிறார்.
புடிக்காத வேலை என்றாலும் யுனிபார்ம் போட்ட தைரியத்தில் ஒருவரை டொவினோ தாக்க, அவரை பெரிய போலிஸ் அதிகாரியே கண்டிக்கின்றனர். இந்த நிலையில் டொவினோவுடன் சேர்த்து பல போலிஸார்கள் படத்தின் ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் சிறு போராட்டம் நடத்தினார்களே அவர்கள் பெரிய போராட்டமாக நடத்த திட்டமிடுகின்றனர்.

டொவினோ போலிஸ் கதாபாத்திரம் என்றாலே அவருக்கு அல்வா சாப்பிடுவது போல, ஆனால், இதில் ஒரு கான்ஸிடபுள் ஆக எந்த அதிகாரமும் இல்லாமல் புடிக்காத வேலையை அவர் செய்ய, கடைசியில் அது அவரை எந்த அளவிற்கு செல்வது என்பதை தன் முகத்தில் அவர் காட்டிய விதம் டொவினோ திரை பயணத்தில் இந்த வர்கீஸ் கதாபாத்திரம் ஒரு மறக்க முடியாத ரோல் தான்.
ஆரம்பத்தில் மலைவாழ் மக்கள் போராட்டத்தின் போது ஏம்பா இந்த வேலிய உடைச்சிங்க, போட்டு கொடுங்க என எண்ட்ரி ஆகி, அடுத்தடுத்து பல நாச வேலைக்கு மிக முக்கிய புள்ளியாக விளங்கும் சேரன் நெகட்டிவ் சைட் நடிப்பு ரசிகர்களுக்கு கடுக் அதிர்டச்சி தான்.

அதே நேரத்தில் நீதித்துறை ஒன்று உள்ளது, அவர்களிடமிருந்து எந்த கொம்பனும் தப்பிக்க முடியாது, அதற்கு ஒருவர் மனம் திறந்தினாலே போதும், என டொவினோ கொடுக்கும் வாக்குமூலம் ஒரு அரசாங்கத்திற்கே அச்சம் வர வைக்கும் என்பதையும் இயக்குனர் காட்டிய விதம் சிறப்பு. பல போராட்டங்கள் கலவரங்களாக எப்படி மாறுகிறது.
கடைசியில் அரசாங்கம் அதை தங்ககுக்கு சாதகமாக எப்படி மாற்றுகிறது என்பதை பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன் காட்டியுள்ளனர். எந்த துறை என்றாலும் நல்லவர்களும் இருப்பார்கள் என்பது போல் ட்வின் வழிகாட்டும் சூரஜ் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.
எந்த காலகட்டத்திலும் இந்த துப்பாக்கியை மட்டும் பயன்படுத்த கூடாது போன்ற வசனம் கவனிக்க வைக்கிறது. அதே நேரத்தில் படம் மிக மெதுவாக நகர்ந்து செல்வது சிலருக்கு பொறுமையை சோதிக்கலாம், ஒளிப்பதிவு, இசை, என டெக்னிக்கல் டீம் ஒர்க் நன்று.
படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகர்ந்து செல்லும் காட்சிகள், அதிலும் காதல் காட்சிகள் தேவையா என்பது போல் உள்ளது.









