Freedom – விமர்சனம்
சசி குமார், லிஜா மோல் நடித்துள்ள இப்படத்தை சத்திய சிவா இயக்கி உள்ளார். அது 1991 ஆம் ஆண்டின் ஒரு நாள் இரவு. இலங்கையில் உள் நாட்டு போர் நடக்கும் நிலையில் அங்கே உள்ள தமிழர்கள் பலர் அடைக்கலம் வேண்டி தப்பித்து நமது ராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள். வருபவர்களை நமது தமிழ் நாடு அரசு ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கிறது. இப்படி வந்தவர்களில் மாறனும் (சசி குமார்) செல்வியும் (லிஜா மோல்) கணவன் -மனைவி. செல்வி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

அகதிகளின் குடுபத்தினர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் இவர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்பும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய அரசு மறுக்கிறது. வேறு வழி இல்லாமல் அகதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். சிறை அறையிலிருந்து வேலூர் கோட்டை அகழி வரை குழி தோண்டி 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று தப்பிக்க திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை அகதிகளின் வலி நிறைந்த வாழ்வியல் பின்னணியில், ஒரு திரில்லர் வகை படமாக சொல்லி இருக்கிறார் சத்ய சிவா.

ஆர்ட் டைரக்டர் உதயகுமார் திரையியில் உருவாக்கிய இந்த வேலூர் கோட்டை ஒரு கேரக்டர் போல் படம் முழுவதும் வருகிறது. கிளைமாக்ஸ் காட்சியில், ‘எப்படியாவது அகதிகள் தப்பித்து ஏதாவது நாட்டில் நிம்மதியாக இருக்கட்டும் நம்ம ஊர்ல இருந்து கஷ்டப்பட வேண்டாம்’ என்று நாம் எண்ணும் அளவில் மிக சிறப்பாக காட்சிகள் உருவாக்க ப்பட்டுள்ளன. கிப் ரானின் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.
சசிகுமார் மிக சிறப்பாக நடிக்கிறார். போராட்ட குணம் கொண்ட ஒரு இலங்கை தமிழனாக ஒரு லைவ் கேரக்டரில் வாழ்ந்துள்ளார் சசி. இன்னொரு ரேவதி என்று சொல்லும் அளவிற்கு லிஜா மோல் மிக சிறப்பாக நடித்துள்ளார். கர்ப்பிணியாக நடிக்கும் போதும், அதிகாரியிடம் நியாயம் கேட்கும் போதும், பாதிக்கப்பட்ட இலங்கை பெண்ணை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். சிறையில் இருப்பவர்கள், காவல் துறை அதிகாரி, வயதான அகதியாக நடிக்கும் பேராசிரியர் மு.ராமசாமி என அனைவருமே சரியான தேர்வுகள்.









