பீப் – விமர்சனம்
எல். சண்முகசுந்தர் இயக்கத்தில் ராகவ் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான பீப
ஃபோட்டோசென்சரி (photosensory) சக்தி கொண்ட ஒரு சாதாரண இளைஞன் மற்றும் அவனது நண்பர்கள் குழுவினரை சுற்றியே கதை நகர்கிறது.எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு கொலையை இந்த நண்பர்கள் குழு எவ்வாறு கண்டுபிடிக்க முயல்கிறது என்பதுடன் ஒரு காவல்துறை விசாரணை இணைந்து சஸ்பென்ஸ் தருகிறது.
கால் கேர்ள் ஒருவருடன் ராகவ்க்கு பழக்கம் ஏற்படுகிறது. திடீரென்று அந்தப் பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடக்கிறார். அது தற்கொலையா அல்லது யாராவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? அப்படி செய்தால் அதை யார் செய்தது என்ற பல்வேறு கேள்விகள் எழுகிறது. தனக்கு தோழியாக இருந்த பெண் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ராகவ் இது குறித்த போலீசில் புகார் கொடுத்து நீதி கேட்கிறார். அத்துடன் அவரும் களத்தில் இறங்கி யார் குற்றவாளி என்பதை துப்பறிய முயல்கிறார் இதில் கால்கேர்ள் சாவிற்கு என்ன காரணம் என்பதற்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
பீப் வழக்கமான திரைப்படமாக இல்லாமல் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புத்தக வடிவில் படித்தது போன்ற பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது அதனால் படத்தில் காட்சிகள் முழுக்க முழுக்க உரையாடலாகவே கடந்து செல்கிறது

ராகவ் மற்றும் நண்பர்கள் பெண்களை சைட் அடிப்பது பின்னர் தங்களுக்குள் அவர்களைப் பற்றி பேசிக் கொள்வது போன்ற காட்சிகள் யாரோ சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து பேசிக் கொள்வது போலவும் அதை அருகில் இருந்து கவனிப்பது போன்ற உணர்வு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.
கால் கேர்ளாக யாமினி செதுக்கிய சிலைபோல் வருகிறார். ராகவுக்கும் யாமினிக்கும் ஏற்படும் நட்பு காமத்தை மீறிய தோழமை உணர்வு என்ற கோணத்தில் தான் நகர்கிறது. திடீரென்று யாமினி மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடப்பது ஷாக்.
யாமினி எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்க போலீஸுடன் சேர்ந்து ராகவும் அவரது நண்பர்களும் துப்பறியும் வேலையில் ஈடுபடுவதும், ராகவுக்கு புகைப்படத்தை பார்த்தவுடன் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் ஒரு சிறப்பு ஆற்றல் இருப்பதால் அதைக் கொண்டு கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்புடன் காட்சிகள் நகர்ந்தாலும் அதை ஈடு செய்யும் வகையில் காட்சிகளில் அழுத்தமில்லை.
போட்டோவை பார்த்து என்ன நடந்தது என்பதை சொல்லும் திறமை கொண்ட ராகவ் பலமுறை யாமினி இறந்து கிடக்கும் புகைப்படத்தை பார்த்தும் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முற்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

பிரேமா கண்ணா, ஐடிஐ ஆச்சார்யா, அருண் மோகன், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், ஜூஹி சர்மா, பிரியதர்ஷினி, நிதிஷ், பாலாஜி, ராஜவேல், அப்துல், ஜி சிவகுமார், வெங்கட் ரமேஷ், ஆர் கணேசன், என பலர் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ப்ரொபசர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல் சண்முகா தனித்து தெரிகிறார்.
பிரசாந்த் விஹாரி இசை அமைத்திருக்கிறார். பிரதீப் பத்மகுமார் கேமரா காட்சிகளை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது
இயக்குனர் இல சண்முக சுந்தர் மாறுபட்ட ஒரு பாணியில் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாவலை போல் காட்சிகள் அமைத்திருப்பது சினிமாவுக்கு பொருத்தமாக இல்லாவிட்டாலும் கொலைகாரன் யார் என்ற உண்மையை தெரிந்து கொள்வதற்காக கிளைமாக்ஸ் வரை ஆடியன்சை இருக்கையில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படம் குறித்து யோசிக்கையில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நித்திஷ் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது .
அதை நினைக்கும் போது ரொம்ப பழைய படமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
கிரைம், இன்வெஸ்டிகேஷன் பர பர காட்சிகள் இருந்தும் விறுவிறுப்புக்கு சற்று பஞ்சம் தான்
செப்டம்பர் 18ல் வந்த படங்களில் இது ஓகே ரகம்.









