எளிய ஒடுக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞனா படத்துல தங்கராசு ஐயாவ பாக்குறப்ப ஒருமாதிரி மனச பிசையுற சோகம். வசதியில்லாம மழைக்கு ஒழுகுற கூரை வீட்டுல வாழுறார்ன்னு செய்தி வந்தப்ப உண்மையில வருத்தமா இருந்துச்சு.


இந்த செய்திய படிச்சதுக்கு பின்னாடிதான் ஆசுவாசமாச்சு.
வாழ்த்துகளும் நன்றிகளும் உதவிய அனைவருக்கும்.தமுஎகச மாநிலக்குழு சார்பில் நாட்டுப்புறக்கலைஞர் நெல்லை தங்கராசு (பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தவர்) அவர்களுக்கு நாட்டுப்பு கலைச்சுடர் விருது கொடுக்க முடிவு செய்தோம். அந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிக்கச் சென்ற போது அவர் வறுமையில் குடிசை வீடு ஒன்றில் வசிப்பது தெரியவந்தது. தெரிந்தவுடன் நமது தோழர் R Narumpu Nathan உள்ளிட்ட நமது தோழர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு நம் அமைப்பின் சார்பாக அவரின் நிலையை கொண்டு சென்றோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த அடிப்படையில் நேற்று நடந்தவை…


1. தங்கராசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கக வீடு ஒன்றை ஒதுக்கித்தர முன் வந்துள்ளார் ஆட்சியர் விஷ்ணு.
2. அவரது மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார். சம்பளம் ரூ 10,000/- ( தற்போது வெளியூரில் ஒரு தனியார் பள்ளியில் 2500/- சம்பளத்தில் அவர் பணி புரிகிறார்)
3. நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர் என்ற அடிப்படையில் தங்கராசு அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3000/- பெற சிபாரிசுக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். விரைவில் கிடைத்து விடும்.
4. அவரது வாழ்வாதாரம் சிதைந்த சூழலில் அவருக்கு ஏதேனும் நிதியுதவியை தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நெல்லை வரும்போது அளிக்கலாம் என்ற அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தோம். இதுவரை 68,000/- நிதி சேர்ந்துள்ளது.
5. நேற்று மாவட்ட ஆட்சியர் 70,000/- ரூபாய்க்கான காசோலையை அவரது மகளிடம் வழங்கினார்.
தமுஎகச நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு அவர்களுக்கு விருது வழங்கியதன் பின்னணியில் இவ்வளவும் நடந்துள்ளது.
via Shruti Ilakkiyam








