பேய் இருக்க பயமேன்’ படத்தை இயக்கி நடித்த சீ.கார்த்தீஸ்வரன், அடுத்து இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஹீரோ “கே”வாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன் நெகட்டிவ் ஹீரோவாக தனது கதாபாத்திரத்தை அமைத்துக் கொண்டு இருந்தாலும் அதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு.. சொல்லப்போனால் மக்களுக்கு மோசடியில் இருந்து தப்பிக்க ஒரு எச்சரிக்கை தரும் நடிப்பாக வெளியிட்டிருப்பது என்னதான் நெகடிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் அவரை ஹீரோ இமேஜ்க்கு உயர்த்தத்தான் செய்கிறது.
ஆள் என்னமோ ஒல்லிபிச்சான் ஆக இருந்தாலும் மோசடி திட்டங்கள் போட்டு மக்களை ஏமாற்றும் போது இப்படித்தான் ஆன்லைனில் மோசடிக்காரர்கள் ஏமாற்றுகிறார்களோ என்ற தெளிவு பிறக்கிறது. தத்ரூபமாக அந்த கதாபாத்திரத்தில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தீஸ்வரன்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீநிதி இளமையான போலீசாக இருந்தாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
பைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாறும் லிவிங்ஸ்டன் எபிசோட் சென்டிமெண்டாக மனதை தொடுகிறது.
ஆதவன்,சன் டிவி அகல்யா உள்ளிட்ட இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.
டி ராதாகிருஷ்ணன் படத்தை தயாரித்திருக்கிறார்.
நடிகராகவும் இயக்குனராகவும் எஸ் கார்த்தீஸ்வரன் பாஸ் ஆகியிருக்கிறார். படத்தில் உயர் அதிகாரிகளை பணம் கொடுத்து சரி கட்டுவது போல் காட்டி இருப்பதும், தப்பு செய்தவனை எந்த தண்டனையும் இல்லாமல் தப்பிப்பது போல் காட்டி இருப்பதையும் சென்சார் எப்படி அப்ஜெக்ட் செய்யாமல் விட்டார்கள் என்பது கேள்விக்குறி..
படத்தில் இன்னொரு தவறு படம் பார்ப்பவர்களை நெழிய செய்கிறது என்றால் படத்தில் மக்கள் ஏமாறும் தொகை 4000 கோடி 5000 கோடி பத்தாயிரம் கோடி என்று ரொம்ப மிகையாக இருப்பது படத்திற்கு பெரிய மைனஸ்.
ஹீரோவாக நடித்து இயக்கி இருக்கும் கார்த்தீஸ்வரன் இப்படத்தில் நடிக்காமல் வேறு ஒரு பரிச்சயமான முகமுள்ள ஹீரோவை நடிக்க வைத்திருந்தால் இந்த படம் மேலும் வாகை சூடி இருக்கும்.
ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இது பெரியவர்கள் சொல்லும் பழமொழி.
இந்த படம் சொல்லும் புது மொழியும் அதுதான்.









