

திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம் பேரூராட்சி, தன்னீர்பந்தல் பாளையத்தில் புதிதாக அரசு மதுபானகடை திறக்கப்பட்டது. திடீரென மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட மதுபான கடை மற்றும் திறந்த வெளி மதுபான கூடத்தை மூட வேண்டும் என எதிப்பு தெரிவித்து வருகின்றனர் . கருவலூர், தெக்கலூர் தன்னீர்பந்தல் பாளையத்தில் சுமார் ஐந்தாயிரத்திற்க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் அப்பகுதியில் விசை தறி கூடங்கள், விவாசாய தொழில்கள் உள்ளது மேலும் கால்நடைகள் மற்றும் மான் ,மயில் என அதிக அளவில் இருக்கின்றன, குறிப்பாகமதுபான கடை அமைந்திருக்கும் அப்பகுதி வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மானவிகள் , வெளியூருக்கு வேலைக்கு செல்லும் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அருகில் பேருந்து நிறுத்திற்க்கு தான் வந்து செல்கின்றனர். சிலர் இரு சக்கரம் நான்கு சக்கர வாகனங்களில் அவ்வழியாகதான் சென்று வருகின்றனர் இந்த புதிய டாஸ்மாக் மதுபான கடையால் வழிபறி , கொள்ளை போன்ற சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் .
இதனால் இந்த திறந்த வெளி டாஸ்மாக் மதுபான கூடத்தை மூட வேண்டும் எனவும் மூட வில்லை என்றால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றினைந்து மிக பெரிய அளவில் போரட்டம் செய்ய உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர் .









