

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா நோய் பரவல் ஏற்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
பள்ளிகளில் கொரோனா தொற்று:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு தெரிவித்த நிலையிலும், மாணவர்களுக்கு போதிய இடம் இல்லாத காரணத்தால் மாணவர்கள் நெருக்கமாக அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி பள்ளிகளில் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது. அதன்பின் அந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


இதன்படி காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல அருப்புக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இருந்ததால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் சிவகாசியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையிலும், ஒரு ஆசிரியர் சிவகாசி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகாசி தனியார் மகளிர் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியைகள் 2 பேருக்கும், மாணவிகள் 4 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லூரி வளாகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள் கொரோனா விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழகம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் எச்சரித்து வருகிறது. எனவே அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.









