2042 ல் நடக்கும் கதை. அதை ஆதரவில்லாத மூதாட்டியான சச்சு சொல்ல, அவரை கவனித்துக்கொள்ளும் இளைஞன் கேட்பதாகக் கதை அமைகிறது.
அரசியல்வாதிகளை சட்டை செய்யாமல் தன் அதிகாரத்தின்படி நடந்து கொள்ளும் அவர் அனைத்து அரசியல்வாதிகளின் பகைமையை சம்பாதிக்கிறார். அதன் விளைவாக சஸ்பென்ட் ஆகிறார்.
இந்நிலையில் தாய் நாட்டில் (தமிழ்நாடு என்று சொன்னால் சென்சார் பிரச்சனை வருமென்று தாய் நாடு என்கிறார்கள்) தேர்தல் வர, அங்கே ஆட்சியைப் பிடிக்க விரும்பும் பிரதமர், அபர்ணதியின் திறனைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்த அசைன்மென்ட்டை அவரிடம் கொடுக்கிறார்.
பாத்திரமாகவே மாறத்தெறிந்த அபர்ணதியின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. அந்த ஆளுமையில் அந்தப் பாத்திரமே எழுந்து நிற்கிறது.
சரவண சுப்பையா அவரைத் துகில் உரியும் காட்சியைப் புரிந்து கொண்டு நடித்திருக்கும் அவரது தைரியம் வேற லெவல்..!
அதற்கு ஈடாக ஜான் விஜய்யின் வில்லன் நடிப்பும் மிரட்டல். ஆனால், ஆங்காங்கே தன் வழக்கப்படியே மிதமிஞ்சி நடித்து சலிப்பேற்றுகிறார்.
அபர்ணதியின் தந்தையாக வரும் காளி வெங்கட் தன்.வழக்கப்படியே இயல்பான நடிப்பில் எடுப்பாகத் தெரிகிறார்.
தாய்நாட்டின் முதல்வராக வரும் இளவரசு, எதிர்க்கட்சித் தலைவராக வரும் லிவிங்ஸ்டன், பிரதமராக வரும் பெண்மணி எல்லோருமே அபர்ணதி, ஜான் விஜய்யை அறிவாளிகளாகக் காட்ட வேண்டி முட்டாள்களாகவே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள்.
எம். எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் நயம்.கதையை எழுதி.இயக்கி இருக்கும் ராகுல் அசோக் இந்திய அளவிலும், தமிழ் நாட்டளவிலும் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை அங்கங்கே செருகி இருப்பதால் அவற்றை ரசிக்க முடிகிறது.
கடைசியில் கதை சொல்லும் சச்சுவை வைத்து இயக்குனர் கொடுத்திருக்கும் ட்விஸ்ட்டை எத்தனைபேர் புரிந்து கொள்வார்கள்? புரிந்து கொள்பவர்களும் சந்தேகத்துடனேயேதான் வெளியே வர முடிகிறது.
நல்ல ஒரு மாஸ் ஹீரோ போட்டு எடுக்க வேண்டிய கதையில் ஹீரோயினி போட்டது இதுவரை தெரியவில்லை.









