பட சம்பந்த பட்டவர்கள்.. சம்பந்தபடாத திரை உலக பிரமாக்கள்.. தமிழ் சினிமா உலகம்.. உலக சினிமா ரசிகர்கள்.. கதை படித்தவர்கள்.. படிக்காதவர்கள்.. கதை படித்துக் கொண்டிருப்பவர்கள்.. விமர்சனம் எழுத நினைப்பவர்கள்.. முதல் ஷோவை பார்த்து எழுத துடிப்பவர்கள்..
எல்லோரும் மணி ரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்” பார்க்க ஆவலோடு இருப்பது ஒரு வரலாற்று நினைவு.. சந்தோசம்.
கல்கியின் காவியத்தை கண் முன்னால் கொண்டு வருகிற சவால் அசைன்மென்ட்.


சுந்தர சோழன் நம் கைக்குள்ளே வந்திடணும். சினிமாவில் அதன் சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு, அதை எந்த அளவுக்கு கோர்வையாக சொல்லணுமோ அப்படி சொல்லணும். நாவலில் ஒரு விஷயம் சொல்லிட்டு இருக்கும்போது, அங்கே வந்தியதேவனை விட்டுட்டு வந்துட்டேன்னு, கல்கி பின்னாடி போயிடுவார்.
அங்கே கதை சொல்லிட்டு அப்புறம் இங்கே வருவார். படிக்கிறவனையும் எப்பவும் கூட சேர்த்துக்கிட்டே போவார் கல்கி. திரும்ப கூட்டிட்டு வருவார். சினிமாவில் அப்படி செய்ய சுதந்திரம் கிடையாது. இறங்கி அப்படி செய்ய முடியாது. அதற்கு கூடுதலாக முயற்சி பண்ணி இயல்பாக செய்திருக்கேன்.”
டெக்னாலஜி நிறைய வளர்ந்திருப்பதால் இப்ப பெரிய சௌகரியம். நிஜத்திற்கு பக்கமாக நிறுத்திக் கொண்டு வந்திருக்கோம். செட் போட்டு எடுத்த மாதிரி தெரியக்கூடாது. செயற்கைத்தனம் வரக்கூடாது. முடிந்தவரை வானம், கீழே மண் தெரியணும். புழுதி பறக்கணும்.. ரவிவர்மனோடு சேர்ந்து அப்படிதான் எடுத்திருக்கோம்.
எல்லாம் பொருந்தினால் தான் நடிகர்கள் உள்ளே வர முடியும். உடல் அமைப்பும் பெர்சனாலிட்டியும் ஒண்ணு. அதை தாண்டி திறமை வேறொண்ணு. திறமை இருக்கு, பண்ணிட்டாங்க.
எனக்கு ஜெயமோகன் ஒரு கையிலும் கல்கி ஒரு கையிலும் இருந்தது பெரிய பலம். எழுதின விதம், வசனம் எல்லாம் பழைய தமிழில் இருக்கணும். நாடகம் மாதிரி தெரியக்கூடாது. அலங்கார தமிழும் வேண்டாம். மனோகரா மாதிரி போயிட முடியாது. அது அந்த காலத்திற்கு அருமையாக பொருந்தியது. அது தமிழ் பிரவாகமெடுத்த நேரம். இப்ப அது மாதிரி இருக்கக் கூடாது. ஜெயமோகன் எளிய, புரியக்கூடிய வடசொல் கலக்காமல் வசனம் எழுதினார். அது பேச சுலபமாக இருந்தது. குமரவேலுக்கு, கதையின் ஐந்து பாகத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும்.. எதைக் கேட்டாலும்.. எந்த பக்கத்தில் உள்ளதை கேட்டாலும் தெரியும். அவர் நாவலில் அத்துபடியாக இருந்தார். அவரோட உதவி முக்கியமானது.”
ரஹ்மான், அவர் தந்த இசை, குவாலிட்டி இதுவரை பார்த்த சரித்திர படங்களிலிருந்து வித்தியாசத்தை கொடுத்திருக்கு.
ரவிவர்மன் பிரமாதம். நாங்கள் எவ்வளவு உழைப்பை போட்டோமோ அதுக்கு மேலே அவர் போட்டாகணும். எப்பவும் ரெடியா இருப்பார். நிறைய நடிகர்கள்.
யாரையும் காக்க வைக்க முடியாது. நாங்கள் நிற்கும் போது அவர் ஓடணும். நாங்க ஓடும்போது அவர் பறக்கணும். அழகாகவும் எடுக்கணும். நிதானமாக ஆற அமர எடுக்க முடியாது. குறைந்த அவகாசத்தில் நிறைவு வேணும். நல்லா இருக்கணும். அப்படியே செய்தார் ரவி. அவரால்தான் அது முடியும்.