ராவ் சாஹிப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் பேரன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனருமான வெங்கடேஷ் குமார் ஜி, மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து தனது பாட்டனார் ஏழுதிய புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்தார். மேலும் அவர்களின் படைப்புக்களை நாட்டுடைமை ஆக்குவதற்கான கோரிக்கையும் வைத்தார். கு கோதண்டபாணி பிள்ளை அவர்கள் மெட்ராஸ் மாகாணத்தின் உதவி ஆட்சியாளராகவும், அயல்நாடு செல்கை கட்டுப்பாட்டாளராகவும் பணிபுரிந்தார். அவர் முப்பதற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது !!!










