பாண்டம் எப் எக்ஸ் (PhantomFX) நிறுவனம், பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கிறது
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான பாண்டம் டிஜிட்டல் எபெக்ட்ஸ் லிமிடெட் (PhantomFX) நிறுவனம், உலகம் முழுவதும் பல திரைப்படங்களுக்கும், இணையத் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் பிரமிக்க வைக்கும் தத்ரூபமான காட்சி விருந்துகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

VFX, அனிமேஷன் பிரிவுகள் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் துறைகள், எதிர்காலத்தில் மிக பிரம்மாண்டமன அளவில் வளர்ந்து வரக்கூடிய ஆற்றல் படைத்த தொழில்களாக இவை இருக்கும் என்றும் இவர் உறுதிபடக் கூறுகிறார்.
இத்தகைய சூழ்நிலையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகிலேயே முதன்மையான VFX நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு PhantomFX நிறுவனம் ஆயத்தப்படுத்தி கொண்டு வருகிறது.
கொச்சி, ஹைதராபாத், ஆகிய இடங்களில் உயர் தரமான டிஜிட்டல் ஸ்டுடியோக்களை அமைக்கவும், ஏற்கனவே இருந்துவரும் சென்னை, மும்பை ஸ்டுடியோக்கள், இரண்டாம் அடுக்கு நகரங்களான கோயமுத்தூர், மதுரை ஸ்டுடியோக்களையும் மிகப்பெரிய அளவில் விரிவாக்கவும் PhantomFX நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக திரு.பிஜோய் கூறினார்.
“உலகத்தரத்துடன் கூடிய டிஜிட்டல் ஸ்டுடியோக்களை கனடாவில் உள்ள வான்கோவரிலும், மான்ட்டிரியாவிலும், அமெரிக்காவில் லா ஸ்ஏஞ்சல்சிலும், இங்கிலாந்து துபாய் ஆகிய நாடுகளிலும் அமைப்பதற்கான திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இவை தவிர சாத்தியமுள்ள மற்ற வெளிநாட்டுச் சந்தைகளை நாடுவதற்கும் பேராவல் கொண்டுள்ள நாங்கள் 10 இலட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம்” என்றும் ஜோய்ஸ் கூறினார்.
சென்னையிலும் மும்பையிலும் தற்போது 25ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்திருக்கும் ஸ்டுடியோக்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு இலட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்படும் என்றார் அவர்.
PhantomFX தன்னுடைய எல்லைகளை விரிவாக்கம் செய்யும் போது திறமையான இந்திய இளைஞர்களுக்கு VFX தொழிலில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாகும். மூன்று ஆண்டுகளுக்குள் 2000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறார் பிஜோய். VFX பிரிவில் திறமையுள்ளவர்களை உருவாக்கி வரும் இந்தியாவின் பல்கலைக்கழகங்களுடனும், மற்ற கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து வேலை நியமனங்கள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு, தயாரிப்புக்கு முந்தைய, தயாரிப்புக்குப் பிந்தைய பணிகள் ஆகியவற்றை தற்போது இந்த நிறுவனம் மேற்கொண்டு வருவதாக PhantomFX நிறுவனத்தின் இயக்குநரும், முதன்மைச் செயல்வினை அலுவலருமான பினு ஜோஷ்வா தெரிவித்தார்.
உள்நாட்டு, பன்னாட்டுத் தயாரிப்புப் பணிகளில் PhantomFX நிறுவனம் பங்கேற்று அவற்றைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்திருக்கிறது என்றும் அவர் கூறினார். விஜய் நடித்த பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், ராஜமௌலியின் வீர காவிய அதிரடித் திரைப்படமான RRR, சூர்யாவின் ஜெய்பீம் போன்ற இந்தியாவின் வெற்றிப்படங்கள் பலவற்றிற்கு VFX காட்சிக்கலையை இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பிரம்மாஸ்த்ரா, ஆதிபுருஷ்தே ஆகியனவற்றோடு ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிக்கலை அமைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது, இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகக்கூடியது என்று அவர் கூறினார்.
“எண்ணற்ற சேவைகளை வழங் கி தயாரிப்பு நிறுவனங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். செயற்கை அரங்குகளின் விரிவாக்கம், புழக்கடையில் உயிரினங்கள் ஊர்ந்து செல்லுதல் என்று எதுவாக இருந்தாலும் எங்களுடைய காட்சிக்கலையின் முழுமையான தொகுப்புகள் அந்தக் காட்சிகள் உண்மையாகவே நடப்பது போன்ற அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுகின்றன என்றார் அவர். சுருக்கமாகச் சொல்வதானால், கனவு உலகங்களை படைத்தளிக்கும் ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. கற்பனைக் கதைகள், பழங்கதைகள் ஆகியவற்றிற்கு உயிரூட்ட எங்களால்முடிகிறது என்று பினு ஜோஷ்வா மேலும் கூறினார். படைப்பாக்கச் சேவைகளை உலக நாடுகளுக்கு வழங்கி வரும் இந்தியாவிலேயே மிகச்சிறந்த காட்சிக்கலை அரங்கங்களில் (VFX Studio) ஒன்றாக எங்களைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுக் கூறி வந்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
தனிச்சிறப்புமிக்க தன்னுடைய பணிகளுக்காக PhantomFx நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்பினைப் பெற்றுள்ளது. தேசிய அ ளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகைய விருதுகளில்,